செய்திகள்
கமல்ஹாசன்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புநிதி: முதல்-அமைச்சர் முக ஸ்டாலினுக்கு கமல் பாராட்டு

Published On 2021-05-29 12:10 GMT   |   Update On 2021-05-29 12:10 GMT
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புநிதி மற்றும் படிப்புச் செலவுகளை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன்.
சென்னை:

கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகையாக வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புநிதி மற்றும் படிப்புச் செலவுகளை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன்.

கடந்த 20-ஆம் தேதி பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளைக் காக்க  ‘கண்மணிகளைக் காப்போம்’ என தமிழக முதல்வருக்கு அறிக்கை மூலமாகக் கோரிக்கை வைத்திருந்தேன். இக்குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்புநிதி மற்றும் படிப்புச் செலவுகளை அரசே ஏற்கும் என முதல்வர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News