செய்திகள்
கொரோனா தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை மற்றும் அரிசி மானியத் தொகைகளையும் விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
* கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை பூஜ்ஜிய சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும்.
* நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை மற்றும் அரிசி மானியத் தொகைகளையும் விடுவிக்க வேண்டும்.
* மாநில அரசின் கடன் வாங்கும் அளவை உற்பத்தி மதிப்பில் இருந்து மேலும் ஒரு சதவீதம் உயர்த்த வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.