செய்திகள்
தற்கொலை

பல்லடத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-02-13 16:32 GMT   |   Update On 2021-02-13 16:32 GMT
பல்லடத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்லடம்:

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த பாண்டி மகன் தவபாண்டி, (வயது 26) இவர் கடந்த 5 நாட்களுக்கு முன் பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் தனியார் விசைத்தறிக்கூடத்தில் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தவர். நேற்று முன்தினம் காலை அறையிலிருந்து வெளியே வரவில்லை.

இதையடுத்து உடன் பணிபுரியும் தொழிலாளிகள் கதவை தட்டியபோது திறக்கவில்லை. இதை அடுத்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது தவபாண்டி காடா துணியால் வீட்டின் மேற்கூரை இரும்புக்கம்பியில் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து கதவை உடைத்து உள்ளே நுழைந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது தந்தை பாண்டி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News