செய்திகள்
கோப்பு படம்.

நெல்லை அருகே காதலனுடன் வி‌ஷம் குடித்த இளம்பெண் பலி

Published On 2020-09-12 13:28 GMT   |   Update On 2020-09-12 13:28 GMT
நெல்லை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் வி‌ஷம் குடித்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரை அடுத்த வெட்டுவான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிமுத்து. இவரது மகள் சந்தனமாரி (வயது 19).

இவருக்கும் அதே பகுதியில் உள்ள சிறுக்கன் குறிச்சியை சேர்ந்த பேச்சி துரை (27) என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவர் வீட்டிலும் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதைத்தொடர்ந்து கடந்த 9-ந்தேதி காதலர்கள் இருவரும் ஜோடியாக வி‌ஷம் குடித்தனர். உயிருக்கு போராடிய இருவரையும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலன் அளிக்காமல் சந்தனமாரி பரிதாபமாக இறந்தார். பேச்சிதுரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சீதபற்ப நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News