search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் தோல்வி"

    • விருதுநகர் அருகே காதல் தோல்வியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
    • பெண் தரமறுத்ததால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் ஏ.டி.புது தெருவை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ. இவரது சகோதரர் ஜான்பிரதீப் (வயது 20). பட்டப்படிப்பை பாதியி லேயே நிறுத்தி விட்டு பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். பெற்றோர் இல்லாததால் சகோதரர்கள் தாத்தா பராமரிப்பில் இருந்தனர்.

    இந்த நிலையில் ஜான் பிரதீப் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு காதலியின் பெற்றோரை சந்தித்த ஜான்பிரதீப் திருமணத்துக்கு பெண் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி பெண் தர மறுத்து விட்டனர்.

    இதனால் ஜான்பிரதீப் கடும் மனஉளைச்சலில் இருந்தார். சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்த அவர் சம்பவத்தன்று மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வாழ்க்கையில் வெறுப் படைந்த ஜான்பிரதீப் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சகோதரர் ஜான்பிரிட்டோ கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜய் மது பழக்கத்திற்க்கு அடிமையானதால் காதலி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் அண்ணா தெருவை சேர்ந்தவர் விஜய் (27). இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் விஜய் மது பழக்கத்திற்க்கு அடிமையானதால் காதலி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த விஜய் எறும்புகளை அழிக்க பயன்படுத்தும் டர்பண்ட் ஆயிலை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.

    • காதல் தோல்வியில் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் அருண்ராஜ் (வயது25). இவர் திருச்சு ழியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக அருப்புக்கோட்டையை சேர்ந்த ஒரு பெண்ணை அருண்ராஜ் காதலித்து வந்தார். ஆனால் அந்த பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் கடந்த சில நாட்களாக அருண்ராஜ் விரக்தியுடன் காணப்பட்டார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது குடும்பத்தினர் வெளியே சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த அருண்ராஜ் காதல் தோல்வியில் ஏற்பட்ட விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அருப்புக் கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அவரது பாட்டி முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதல் தோல்வியில் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவகாசி அருகே காதல் தோல்வியில் வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஹனீப்அலி. இவரது மகன் ஹபிதுல் ஹக்(19). இவர் தனது ஊரில் உறவினர் பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெண் வீட்டார் ஏற்கவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த ஹபிதுல் ஹக் சிவகாசி சிட்கோவில் உள்ள தனியார் நிறுவ னத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்தார்.

    சில வாரங்களுக்கு முன்பு மகனை பார்க்க அவரது பெற்றோர் வந்த னர். அப்போது காதலித்த பெண்ணை மறந்து விடுமாறும், வேறோரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் ஹபிதுல் ஹக் இதனை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காதல் தோல்வியால் ஏற்பட்ட மன வருத்தத்தில் தான் தங்கியிருந்த அறையில் ஹபிதுல் ஹக் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை ஹனீப்அலி கொடுத்த புகாரின்பேரில் திருத்தங்கல் 

    • இளம்பெண்ணுக்கு சஞ்சய் பர்மல் ஏராளமான பரிசு பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து அனுப்பி வந்ததாகவும் தெரிகிறது.
    • மனமுடைந்த சஞ்சய் பர்மல் காதலி குறித்து உடன் வேலை பார்க்கும் நண்பர்களிடம் கூறி வருத்தம் அடைந்தார்.

    மாமல்லபுரம்:

    மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் சஞ்சய் பர்மல் (வயது20). இவர் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் உணவகம் ஒற்றில் சைனீஸ் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வீடியோ கால் மற்றும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி தங்களது நட்பை வளர்த்து வந்தனர்.

    அப்போது அந்த இளம்பெண்ணுக்கு சஞ்சய் பர்மல் ஏராளமான பரிசு பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து அனுப்பி வந்ததாகவும் தெரிகிறது. இதற்கிடையே சஞ்சய்பர்மல் அந்த பெண்ணை காதலிக்க தொடங்கினார். இதையடுத்து அவர் தனது காதல் குறித்து அவரிடம் தெரிவித்தார். ஆனால் அந்த இளம்பெண் காதலை ஏற்க மறுத்ததாக தெரிகிறது. மேலும் நட்பாக பழகியதாக கூறி உள்ளார்.

    இதனால் மனமுடைந்த சஞ்சய்பர்மல் காதலி குறித்து உடன் வேலை பார்க்கும் நண்பர்களிடம் கூறி வருத்தம் அடைந்தார். அவரை நண்பர்கள் சமாதானப்படுத்தி வந்தனர். இந்தநிலையில் காதல் தோல்வியால் மனமுடைந்த சஞ்சய்பர்மல் தங்கி இருந்த அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்டு அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதல் தோல்வியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவை சேர்ந்த வர் முத்துசாமி மகன் சிவ குமார் (வயது26). இவர் இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் காதலை அந்த பெண்ணிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர். இதை அறிந்த சிவகுமார் விரக்தியில் இருந்துள்ளார். சம்பவத்தன்று மனஉளைச்சல் காரணமாக நள்ளிரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து சிவகுமாரின் தாய் இந்திராணி ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் சிவகுமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்மட்டிபுரம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சாதிக் உசேன்(47). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் குடிபோதையில் வந்தார்.

    அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சாதிக் உசேன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சுமைலத் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்மேனி காளிமுத்து நகரைச்சேர்ந்தவர் பால்பாண்டி (52). இவருக்கு கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பு இருந்தது. இதனால் மன அழுத்தத்தில் இருந்தாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் ஹரிகிருஷ்ணன் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதல் விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் நேரடியாக வந்து ராகுலை கண்டித்தனர்.
    • சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கரட்டுப்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராகுல் (வயது 24). இவர் திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளியல் படித்து வந்தார். சின்னாளப்பட்டியில் தனியாக அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த அதே கல்லூரியில் படித்த மாணவி ஒருவருக்கும் காதல் மலர்ந்தது.

    இந்த காதல் விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் நேரடியாக வந்து ராகுலை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த ராகுல் தனது அறையிலேயே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்த நபர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் விக்னேஷ் தாய் செல்வி புகார் கொடுத்தார்.
    • விக்னேஷ் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா?

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள பொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிகேசவன் மகன் விக்னேஷ் (வயது 19) கூலி வேலை செய்துவந்தார். கடந்த 21-ந் தேதி வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அருகிலுள்ள இடங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடி எங்கேயும் கிடைக்காததால் கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில்விக்னேஷ் தாய் செல்வி புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காணாமல் போன விக்னேசை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பொட்டியம் சுடுகாட்டில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக கச்சிராயபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் பார்த்தபோது இவர் காணாமல் போன விக்னேஷ் என்பது தெரியவந்தது . இது குறித்து கொலையா? அல்லது விக்னேஷ் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விக்னேஷ் வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அவ்வகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

    • காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள தினசரி மார்க்கெட்டில் கறி கோழி கடையில் வேலை பார்த்து வந்தார்
    • மார்க்கெட்டில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த குன்னத்தூர் செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி/ இவரது மகன் சவுந்தராஜ்(வயது 28). இவர் திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள தினசரி மார்க்கெட்டில் கறி கோழி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சௌந்தரராஜன் தனது உறவினர் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவர் வீட்டிலும் திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியுள்ளனர். இந்த நிலையில் திடீரென திருமணத்திற்கு பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் பெண் வீட்டிலும் ஜாதகம் சரியில்லை என்று கூறி திருமணத்தை நிறுத்தி விட முடிவு செய்தனர்.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சவுந்தர்ராஜ் தினசரி மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரயோத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் விசாரித்த போது அவரது சட்டை பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை சவுந்தர்ராஜ் எழுதி இருப்பதும் தெரிய வந்தது 

    அதில் ''எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள் நான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து சந்தோஷமாக வாழலாம் என்று நினைத்தேன். ஆனால் ஜாதகம் சரியில்லை என்று கூறி எனது திருமணத்தை நிறுத்தி விட்டார்கள். இந்த உலகில் வாழ எனக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனது அப்பா அம்மாவை பார்த்துக் கொள்ளுங்கள்" என எழுதி இருந்தார்.கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் தினசரி மார்க்கெட்டில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வாடகை வீட்டில் நண்பர்கள் 2 பேருடன் தங்கி சினிமாத்துறையில் உதவி கேமராமேனாக ராஜீவ்காந்தி வேலை பார்த்து வந்தார்.
    • ராஜீவ்காந்தியின் அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

    போரூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது36). இவர் வடபழனி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வாடகை வீட்டில் நண்பர்கள் 2 பேருடன் தங்கி சினிமாத்துறையில் உதவி கேமராமேனாக வேலை பார்த்து வந்தார்.

    ராஜீவ்காந்தி இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் ஆனால் அவரது காதலை இளம்பெண் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனை அடைந்த ராஜீவ்காந்தி கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே தினசரி மது குடித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை நண்பர்கள் இருவரும் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டனர்.

    இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்து ராஜீவ் காந்தி திடீரென மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வடபழனி இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து ராஜீவ்காந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜீவ்காந்தியின் அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் "எனது சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை காதல் தோல்வியால் மன உளைச்சலில் அதிகமான குடிபோதைக்கு அடிமையானதால் இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்று எழுதப்பட்டு இருந்தது.

    அவரது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமகிருஷ்ணா அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினார். இதை அவரது தந்தை சுரேஷ் பாபு கண்டித்து உள்ளார்.
    • பெற்றோர் ராமகிருஷ்ணாவை காளிங்கராயன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் மேட்டுநாசுவம்பாளையம் மணக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு. லாரி டிரைவர். இவரது மனைவி சுமித்ரா. இவர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா (22) என்ற மகன் உள்ளார்.

    இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் ராமகிருஷ்ணா அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினார். இதை அவரது தந்தை சுரேஷ் பாபு கண்டித்து உள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தபோது ராமகிருஷ்ணா வாந்தி எடுத்து கொண்டிருந்தார்.

    உடனே இதைப்பார்த்த அவரது பெற்றோர் ராமகிருஷ்ணாவை காளிங்கராயன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கல்லூரி மாணவர் ராமகிருஷ்ணா தான் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் தோல்வி அடைந்ததால் எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டு உள்ளதாகவும், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

    இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராமகிருஷ்ணா ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது தாய் சுமித்ரா கொடுத்த புகார் அடிப்படையில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதல் தோல்வி அடைந்ததால் சுபாஷ் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார்.
    • காவிரி ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பவானி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ராசிகவுண்டனூரை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் சுபாஷ் (24). டிப்ளமோ என்ஜினீயரிங் பட்டதாரி.

    சுபாஷ் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் காதல் தோல்வி அடைந்ததால் சுபாஷ் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று மாலை பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள காவிரி ஆற்றுப்பாலத்திற்கு வந்தார். பின்னர் திடீரென அவர் காவிரி ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள இரும்பு குழாயில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தற்போது காவிரி ஆற்றில் 1 லட்சத்து 20 ஆயிரம்கன அடிதண்ணீர் ஓடுவதால் தற்கொலை செய்த சுபாஷின் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

    இதையடுத்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் சுபாஷின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×