search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை
    X

    காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை

    • ராமகிருஷ்ணா அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினார். இதை அவரது தந்தை சுரேஷ் பாபு கண்டித்து உள்ளார்.
    • பெற்றோர் ராமகிருஷ்ணாவை காளிங்கராயன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் மேட்டுநாசுவம்பாளையம் மணக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு. லாரி டிரைவர். இவரது மனைவி சுமித்ரா. இவர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா (22) என்ற மகன் உள்ளார்.

    இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் ராமகிருஷ்ணா அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினார். இதை அவரது தந்தை சுரேஷ் பாபு கண்டித்து உள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தபோது ராமகிருஷ்ணா வாந்தி எடுத்து கொண்டிருந்தார்.

    உடனே இதைப்பார்த்த அவரது பெற்றோர் ராமகிருஷ்ணாவை காளிங்கராயன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கல்லூரி மாணவர் ராமகிருஷ்ணா தான் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் தோல்வி அடைந்ததால் எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டு உள்ளதாகவும், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

    இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராமகிருஷ்ணா ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது தாய் சுமித்ரா கொடுத்த புகார் அடிப்படையில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×