search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
    X

    காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது

    • காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள தினசரி மார்க்கெட்டில் கறி கோழி கடையில் வேலை பார்த்து வந்தார்
    • மார்க்கெட்டில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த குன்னத்தூர் செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி/ இவரது மகன் சவுந்தராஜ்(வயது 28). இவர் திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள தினசரி மார்க்கெட்டில் கறி கோழி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சௌந்தரராஜன் தனது உறவினர் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவர் வீட்டிலும் திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியுள்ளனர். இந்த நிலையில் திடீரென திருமணத்திற்கு பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் பெண் வீட்டிலும் ஜாதகம் சரியில்லை என்று கூறி திருமணத்தை நிறுத்தி விட முடிவு செய்தனர்.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சவுந்தர்ராஜ் தினசரி மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரயோத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் விசாரித்த போது அவரது சட்டை பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை சவுந்தர்ராஜ் எழுதி இருப்பதும் தெரிய வந்தது

    அதில் ''எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள் நான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து சந்தோஷமாக வாழலாம் என்று நினைத்தேன். ஆனால் ஜாதகம் சரியில்லை என்று கூறி எனது திருமணத்தை நிறுத்தி விட்டார்கள். இந்த உலகில் வாழ எனக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனது அப்பா அம்மாவை பார்த்துக் கொள்ளுங்கள்" என எழுதி இருந்தார்.கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் தினசரி மார்க்கெட்டில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×