செய்திகள்
பிரணாப் முகர்ஜி விரைவில் உடல் நலம் பெற வேண்டும்- மு.க.ஸ்டாலின்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்த போது நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது தெரியவந்ததாக, தனது சமூகவலைதள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், கடந்த வாரம் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை சுயதனிமைப்படுத்தி கொண்டு, கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-
திரு. பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடையவும், விரைவில் நல்ல உடல் ஆரோக்கியம் பெறவும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் குறியுள்ளார்.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்த போது நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது தெரியவந்ததாக, தனது சமூகவலைதள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், கடந்த வாரம் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை சுயதனிமைப்படுத்தி கொண்டு, கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-
I wish Thiru @CitiznMukherjee a speedy recovery from #Covid19 and a quick return to good health.
— M.K.Stalin (@mkstalin) August 10, 2020
இவ்வாறு அவர் குறியுள்ளார்.