search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரணாப் முகர்ஜி"

    • முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி தனது தந்தை பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.
    • இந்தப் புத்தகத்தில் ஷர்மிஷ்தா தனது தந்தையின் பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

    புதுடெல்லி:

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி எழுதிய புத்தக்கம் பிரணாப் மை பாதர். இந்தப் புத்தகத்தில்

    ஷர்மிதா தனது தந்தையின் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    2013-ம் ஆண்டு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிறை தண்டனை பெற்றால் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிராக 3 மாதம் அவகாசம் வழங்கும் அவசர சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.

    அந்த மசோதாவை கிழித்தெறிந்த ராகுல்காந்தி, அவகாசம் வழங்குவது முழு முட்டாள்தனம் என்று விமர்சனம் செய்தார்.

    அப்போது மன்மோகன்சிங் அரசின் அமைச்சராக இருந்த எனது தந்தை பிரணாப் முகர்ஜி மிகவும் கோபம் அடைந்தார்.

    எனது தந்தைக்கும், ராகுலுக்கும் இடையே உரிய சந்திப்பு நடக்கவில்லை. அதில் பல குழப்பங்கள் இருந்தன. சந்திப்பு பற்றி அடிக்கடி மறந்துவிடுவதும் ஒரு காரணமாக அமைந்தது. இதனால் கட்சியை, நாட்டை ராகுல் வழிநடத்தும் திறன் குறித்து எனது தந்தை அப்போது நம்பிக்கை இழந்தார்.

    ஒருநாள் முகல் கார்டனில் எனது தந்தையின் வழக்கமான காலை நடைபயிற்சியின் போது அவரைப் பார்க்க ராகுல் வந்தார். காலை நடைபயிற்சி மற்றும் பூஜையின்போது எந்த இடையூறும் ஏற்படுவதை எனது தந்தை விரும்ப மாட்டார். இருப்பினும், அவரைச் சந்திக்க முடிவு செய்தார். அதன்பின்தான் ராகுல் உண்மையில் எனது தந்தையை மாலையில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் ராகுலின் அலுவலகம் தவறுதலாக சந்திப்பு காலை என்று அவருக்குத் தெரிவித்தது.

    இதுகுறித்து பின்னர் நான் அறிந்தேன். நான் கேட்டபோது எனது தந்தை, ராகுலின் அலுவலகத்திற்கு காலை, மாலை என்பதையே வேறுபடுத்திப் பார்க்க தெரியவில்லை. இப்படி இருந்தால் அவர்கள் எப்படி ஒருநாள் பிரதமர் அலுவலகத்தை இயக்குவார்கள் என கேலியாக கேட்டார் என தெரிவித்துள்ளார்.

    அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால், பிரணாப் முகர்ஜியை பிரதமராக ஆர்.எஸ்.எஸ் முன்னிருத்தும் என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது. #RSS #Pranab #ShivSena
    புதுடெல்லி:

    மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் சிவசேனா இடம் பெற்றுள்ளது. ஆனாலும், சிவசேனா பா.ஜ.க அரசையும், பிரதமர் மோடியையும் கடுமை யாக விமர்சனம் செய்து வந்தது.

    சிவசேனாவுடன் கூட்டணியை தக்க வைத்துக் கொள்ளவும், அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் பா.ஜ,க தலைவர் அமித்ஷா சமீபத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக இருவரும் ஆலோசனை செய்தனர்.

    இதற்கிடையே தங்களுக்கு 152 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று பா.ஜ.க.வுக்கு சிவசேனா நிபந்தனை விதித்துள்ளது. முதல்வர் பதவியை கைப்பற்றும் நோக்கில் இந்த நிபந்தனையை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தேர்தலை தனித்து சந்திக்கவே சிவசேனா தயாரக உள்ளது. 

    இந்த நிலையில் 2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பிரணாப் முகர்ஜியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம் என்று சிவசேனா தெரிவித்து உள்ளது. பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே சிவசேனா இதை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவில் கூறி இருப்பதாவது-

    2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜக.வுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம். டெல்லியில் உள்ள அரசியல் சக்திகள் இந்த முடிவை எடுக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன.

    இதேபோல ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பிரதமர் வேட்பாளருக்கு மாற்றாக பிரணாப்பை நிறுத்தும் முயற்சியிலும் ஈடுபடலாம். ஆர்.எஸ்.எஸ். விழாவில் அவர் பேசியதை ஆர்.எஸ்.எஸ். பாராட்டி இருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் நரேந்திர மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்று பா.ஜ.க ஏற்கனவே அறிவித்து விட்டது. இது குறித்து பா.ஜ.க கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. சிவசேனா தான் தற்போது கருத்து தெரிவித்துள்ளது.

    முன்னாள் ஜனாதிபதியும் காங்கிரஸ் மூத்த தலை வருமான பிரணாப்முகர்ஜி சமீபத்தில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்ற நிலையில், அது தொடர்பாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள் பரவி வருவது தொடர்பாக பிரணாப்பின் மகள் கருத்து தெரிவித்துள்ளார். #PranabAtRSSEvent
    புதுடெல்லி:

    நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் சம்மதித்தபோதே கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பிரணாப் முகர்ஜியின் மகளான சர்மிஸ்தா முகர்ஜியும் அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.

    நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரின் கருப்பு தொப்பி அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது போலவும், கைகளை நெஞ்சுக்கு நேராக வைத்து மரியாதை செலுத்தியது போலவும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. மேலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை பிரணாப் புகழ்ந்து பேசியது போல வாட்ஸப்களில் தகவல்கள் பரப்பப்பட்டன.



    ஆனால், உண்மையில் பிரணாப் அப்படி எதுவும் செய்யவில்லை. மாறாக, இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடுவோம். சகிப்புத்தன்மை இல்லாவிட்டால் நாடு சீர்குலையும் என ஆர்.எஸ்.எஸ்.க்கு பாடம் எடுத்திருந்தார். இந்நிலையில், மார்பிங் புகைப்படங்கள் குறித்து பிரணாப்பின் மகள் அச்சம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சர்மிஸ்தா முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “நான் எதை நினைத்து பயந்தேனோ, எதற்காக எனது அப்பாவை எச்சரித்தேனோ அது நடந்தே விட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிலமணி நேரங்கள் கூட ஆகவில்லை. ஆனால், பாஜக / ஆர்.எஸ்.எஸ் அதன் வேலையை முழு வீச்சாக செய்ய ஆரம்பித்து விட்டது” என தெரிவித்துள்ளார்.
    நாட்டின் பன்முகத்தன்மையை கொண்டாடுவோம், ஒரு சிலரை ஒதுக்கிவிட்டு பன்முகத்தன்மையை கொண்டாட முடியாது என ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேசினார். #RSS #PranabMukherjee
    மும்பை:

    ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான உபச்சார விழா இன்று நடக்கிறது. இதற்கான அழைப்பு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பப்பட்டபோதே சர்ச்சை வெடித்தது. அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியானதும் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் தங்களது அதிருப்தியை அவருக்கு கடிதமாக எழுதியிருந்தனர்.

    இந்நிலையில், சர்ச்சைகள் மற்றும் சலசலப்புகளுக்கு மத்தியில் அவர் இன்று நாக்பூர் வந்தடைந்தார். ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர், அங்கிருந்த குறிப்பேட்டில் “பாரத மாதாவின் சிறந்த மகனுக்கு அஞ்சலி செலுத்த இங்கே வந்துள்ளேன்” என எழுதி கையெழுத்திட்டார்.

    பின்னர், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத் உடன் அவர் சிறிது நேரம் பேசினார். இதனை அடுத்து, உபச்சார விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்:-

    சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது தேசியவாதத்தை சீர்குலைப்பதாக உள்ளது. தேசியவாதமும், தேசபக்தியும் ஒன்றோடொன்று பின்னப்பட்டவையாகும். நாட்டின் பன்முகத்தன்மையை நாம் கொண்டாட வேண்டும். ஒரு சிலரை தனிமைப்படுத்திவிட்டு நாம் பன்முகத்தன்மையை பார்க்க முடியாது

    என குறிப்பிட்டார்.
    பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகர்ழ்ச்சியில் பங்கேற்கும் முடிவை மறு பரிசீலனையில் செய்ய வேண்டும் என்று அவரது மகளும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான ‌ஷர்மிஸ்தா முகர்ஜி தெரிவித்துள்ளார். #PranabMukherjee #SharmisthaMukherjee
    புதுடெல்லி:

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாக்பூரில் உள்ள தங்களது தலைமை அலுவலகத்தில் 3 நாள் நடைபெறும் விழாவில் உரையாற்ற வருமாறு அழைப்பு விடுத்தது.

    இந்த அழைப்பை ஏற்று பிரணாப் முகர்ஜி இன்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முன்பு உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரிடம் வலியுறுத்தினர்.

    இது குறித்து பிரணாப் முகர்ஜி கூறும் போது, “நான் என்ன சொல்ல வேண்டுமோ? அதை நாக்பூர் விழாவில் சொல்கிறேன். ஆர்.எஸ்.எஸ். விழாவில் பங்கேற்க கூடாது என வலியுறுத்தி எனக்கு ஏராளமான கடிதங்களும், தொலைபேசி அழைப்புகளும் வந்துள்ளன. ஆனால் நான் யாருக்கும் பதில் அளிக்கவில்லை. நான் பேச வேண்டிய அனைத்தையும் நாக்பூரில் பேசுவேன்” என்றார். ஆர்.எஸ்.எஸ். விழாவில் பங்கேற்பதற்காக அவர் நேற்று நாக்பூர் சென்றார்.


    இதற்கிடையே பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அவரது மகளும், டெல்லி காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான ‌ஷர்மிஸ்தா முகர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் பா.ஜனதாவில் இணைந்ததாக வதந்தி பரவிய செய்தியாலும் கோபம் அடைந்தார். இதைத் தொடர்ந்து ‌ஷர்மிஸ்தா முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வைத்து பா.ஜனதா இப்படி பொய்யான செய்திகளை பரப்பும். நிகழ்ச்சியில் பிரணாப் என்ன பேசினார் என்பது மறக்கப்பட்டு, அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை மட்டுமே வைத்து பொய்யான செய்திகளையும், தகவல்களையும் பா.ஜனதா பரப்பும். அதற்கான வாய்ப்பை நீங்கள் (பிரணாப் முகர்ஜி) அளிக்கிறீர்கள். இதனால் பிரணாப் தனது முடிவை பரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PranabMukherjee #SharmisthaMukherjee
    ×