search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "praises"

    கிங் மேக்கர்ஸ் அகாடமி கிராமப்புற மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து தேர்வுக்கு தயார்படுத்துவது பாராட்டுக்குரியது என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.
    சென்னை:

    சென்னை அண்ணா நகரில் உள்ள கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் புதிய பயிற்சி வளாகம் திறப்பு விழா மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. அகாடமியின் கவுரவ ஆலோசகர் எம்.பூமிநாதன் முன்னிலை வகித்தார்.

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து காணொலி காட்சி மூலம் அகாடமியின் புதிய பயிற்சி வளாகத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அகாடமியில் பயின்று சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற 20 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:-

    சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முன்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பிள்ளைகள் தான் வெற்றி பெற முடியும். ஆனால் தற்போது அந்த காலம் மாறிவிட்டது. இப்போது சாதாரண குடும்பத்தில் உள்ளவர்களும் வெற்றி பெறுகின்றனர்.

    கிங் மேக்கர்ஸ் அகாடமி கிராமப்புற மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து தேர்வுக்கு தயார்படுத்துவது பாராட்டுக்குரியது.

    நாட்டின் வளர்ச்சியில் சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. நீதி, நேர்மையை நிலைநாட்டுவதற்கு பல திட்டங்களை அதிகாரிகள் கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசுகையில், தெளிவான லட்சியம், சரியான தேர்வு, கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி வெற்றி பெற முடியும்.

    முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனை தரும் என்பதற்கு இலக்கணமாக வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

    முன்னதாக அகாடமியின் நிர்வாக இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன் வரவேற்றார். முடிவில் அகாடமி இயக்குனர் வெங்கடேஷ் நாராயணன் நன்றி கூறினார்.
    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 60 மீட்டர்களுக்கும் உயரமான, 80 டன் எடை கொண்ட கருங்கல்லால் ஆன கோபுரம் தஞ்சை பெரிய கோவில் என மோடி புகழ்ந்து பேசினார். #MannKiBaat #Modi
    மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

    ஒவ்வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் இருக்கிறது. தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி என்பதில் இந்தியாவில் அனைவருக்குமே பெருமிதம் உள்ளது. அதேபோல் வேதகாலம் தொடங்கி இன்று வரை சமஸ்கிருத மொழியும் ஞானத்தை பரப்ப மிகப்பெரும் பங்களிப்பை அளித்து வந்திருக்கிறது.



    சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அகன்ற மலையை, தனிப் பெரும் கல்லால் ஆன ஒற்றை மலையை பரந்த அற்புதமான கோவிலாக செதுக்கி இருக்கிறார்கள். அது, மராட்டிய மாநிலம் எல்லோராவில் இருக்கும் கைலாசநாதர் கோவில்தான்.

    அதேபோல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 60 மீட்டர்களுக்கும் உயரமான, 80 டன் எடை கொண்ட கருங்கல்லால் ஆன கோபுரம் ஒன்று நிறுவப்பட்டது என்று உங்களிடம் யாராவது கூறினால் உங்களுக்கு நம்பிக்கையே பிறக்காது அல்லவா?... ஆனால் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் அந்த அதிசயத்தைக் காணலாம். இந்த கோவிலில்தான் கட்டிடக்கலை, பொறியியல் கலை ஆகியவற்றின் நம்ப முடியாத இணைப்பினைக் காண முடிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MannKiBaat #Modi #tamilnews 
    ×