தமிழ்நாடு செய்திகள்

கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரம்- ரெயில்வே அதிரடி உத்தரவு

Published On 2024-05-03 18:48 IST   |   Update On 2024-05-03 18:48:00 IST
  • கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை.
  • அனைத்து ரெயில்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் சரிவர இயங்குகிறதா? என கண்காணிக்க உத்தரவு.

சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில், உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் கஸ்தூரி (22) தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்த, கர்ப்பிணி கஸ்தூரியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது வயிற்றில் 7 மாத ஆண் குழந்தை சடலமாக இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஓடும் ரெயிலில் இருந்து பெண் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த ரெயில்வே துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், அனைத்து ரெயில்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் சரிவர இயங்குகிறதா ? என்பதை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News