செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

அதிராம்பட்டினம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

Published On 2020-07-04 11:13 GMT   |   Update On 2020-07-04 11:13 GMT
அதிராம்பட்டினம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் வளர்ப்பு பண்ணையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி மாத்தாங்குடி காலனி பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (வயது40) என்பவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பண்ணைக்கு அருகே உள்ள மற்றொரு பண்ணையில் மின் இணைப்பு பழுது ஏற்பட்டது.

இதை சரி செய்ய முயன்றபோது எதிர்பாராதவிதமாக பாஸ்கரனை மின்சாரம் தாக்கியது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாஸ்கரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News