செய்திகள்
விபத்து பலி

பரமத்தி வேலூர் அருகே விபத்தில் விவசாயி பலி

Published On 2020-05-29 13:35 GMT   |   Update On 2020-05-29 13:35 GMT
பரமத்தி வேலூர் அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:

பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள ஜமீன்இளம்பள்ளி சின்ன தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 42), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது மொபட்டில் ஜமீன்இளம்பள்ளி சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பெரியசாமி தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News