செய்திகள்
கொரோனா பரிசோதனையை தமிழக அரசு சரிவர செய்யவில்லை- மு.க.ஸ்டாலின்
கொரோனா பரிசோதனையை தமிழக அரசு சரிவர செய்யவில்லை என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை:
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவியை வழங்கி வருகின்றன. அந்தவகையில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. ‘ஒன்றிணைவோம் வா’ செயல் திட்டம் மூலம் மக்களின் குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்து வருகிறது. அவ்வப்போது நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக உரையாடி வருகிறார்.
இந்நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று காலை காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது, கொரோனா பரிசோதனையை தமிழக அரசு சரிவர செய்யவில்லை. மேலும் ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி கோயம்பேடு மார்கெட்டில் கொரோனா வர செய்துவிட்டனர் என குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவியை வழங்கி வருகின்றன. அந்தவகையில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. ‘ஒன்றிணைவோம் வா’ செயல் திட்டம் மூலம் மக்களின் குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்து வருகிறது. அவ்வப்போது நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக உரையாடி வருகிறார்.
இந்நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று காலை காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது, கொரோனா பரிசோதனையை தமிழக அரசு சரிவர செய்யவில்லை. மேலும் ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி கோயம்பேடு மார்கெட்டில் கொரோனா வர செய்துவிட்டனர் என குற்றம்சாட்டியுள்ளார்.