செய்திகள்
எல்.முருகன்

தமிழகம் முழுவதும் பா.ஜனதா சார்பில் நிவாரண குழு- எல்.முருகன் அறிவிப்பு

Published On 2020-05-12 06:26 GMT   |   Update On 2020-05-12 06:26 GMT
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விதத்தில் ஏழை-எளிய மக்களுக்கு முகக் கவசம் வழங்க பா.ஜனதா சார்பில் நிவாரண குழு அமைக்கப்பட்டுள்ளது என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விதத்தில் ஏழை-எளிய மக்களுக்கு முகக் கவசம் வழங்க மாநில துணைத் லைவர் எம்.என்.ராஜா தலைமையில் சென்னைக்கு சக்கரவர்த்தி, அர்ஜுன் மூர்த்தி உள்பட மாவட்ட வரியாக பொறுப்பளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதேபோல் வெளிமாநில தொழிலாளர்களின் நலனை பேணும் வகையில் அவர்கள் தமிழகத்தில் பயணம் செய்யும் வழியில் உணவு, மருத்துவம், சுகாதாரம், தங்குமிடம், சொந்த மாநிலத்திற்கு வழி அனுப்ப ஏற்பாடு ஆகியவற்றை சிறப்பாக செய்ய மாநில செயலாளர் கரு. நாகராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News