search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எல் முருகன்"

    • தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
    • 3 ஆண்டுகால தி.மு.க ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    மத்திய மந்திரியும், நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் கூட்டமாக இந்த செயல்வீரர்கள் கூட்டம் உள்ளது.

    சேலத்தில் நடந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்களை அறிமுகப்படுத்தி, கூட்டணியை உறுதி செய்து சென்றார். தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

    இந்த தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல். இந்த தேர்தல் பிரதமர் நரேந்திரமோடிக்கான தேர்தல். இந்த தேர்தல் மூலம் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆக போகிறார்களா?.

    ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாத அதி.மு.க எப்படி பிரதமராக போகிறார்கள். 3 ஆண்டுகால தி.மு.க ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    தேர்தலின் போது தி.மு.க டாஸ்மாக் கடைகளை குறைப்போம். கல்வி கடன் ரத்து, மகளிர் சுயஉதவிக்குழு கடன், விவசாய கடன்களை ரத்து செய்வதாக தேர்தல் வாக்குறுதிகளை அளித்தனர்.

    ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் எதையுமே செய்யவில்லை. வழக்கம் போல சொல்வது எதையும் செய்யாத ஆட்சியாக இந்த தி.மு.க ஆட்சியானது செயல்பட்டு கொண்டிருக்கிறது. எனவே தி.மு.க.வை தூக்கி எறிய மக்கள் தயராகிவிட்டனர். பொய் பேசுவதும், கொள்ளையடிப்பதும், லஞ்சம் வாங்குவது, கட்டபஞ்சாயத்து பண்ணுவது, குடும்ப ஆட்சி இவை எல்லாம் தான் தி.மு.க.வின் சிறந்த கொள்கையாக உள்ளது.

    கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் சாலை கள், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் நாடு முழுவதும் அசுர வளர்ச்சியில் முன்னேறி கொண்டிருக்கிறது.அந்த வகையில் மேட்டுப்பாளையத்திற்கான ரெயில் வசதியையும் மேம்ப டுத்தி கொடுத்துள்ளோம்.

    இனி அடுத்து அமையும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியிலும் இந்த சேவைகள் தொடர்ந்து செய்யப்படும். நேர்மையாக மக்களுக்கான ஆட்சியை நடத்தி கொண்டிருப்பது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க தான். பாராளுமன்றத்தில் செங்கோல் வைப்பது உள்பட பல்வேறு வகைகளில் தமிழர்களுக்கு பா.ஜனதா பெருமை சேர்த்து வருகிறது.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் இதுவரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து இந்த தொகுதிக்கு என்ன திட்டத்தை வாங்கி தந்துள்ளார். ஒன்றுமில்லை. அவர் வரலாற்றில் யாரும் செய்ய முடியாத 2 ஜி ஊழலை செய்துள்ளார். மேலும் அவர் இந்துக்கள், பெண்கள் மற்றும் தலை வர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மத்திய அரசு செய்துள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தள்ளுமுள்ளுவில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
    • பாஜக தொண்டர்கள் மீது தடியடி நடத்திய உதகை எஸ்.பி.சுந்தரவடிவேல் மீது அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார்.

    நீலகிரி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக இன்றைய நாளை தேர்ந்தெடுத்து வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். பல இடங்களில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக, பாஜகவை சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் மனுத்தாக்கலுக்கு பேரணியாக செல்ல முயன்றபோது வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. இதனால் போலீசார் நடத்திய தடியடியில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து சம்பவம் தொடர்பாக காவல்துறையை கண்டித்து நீலகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே, தள்ளுமுள்ளுவில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

    பாஜக தொண்டர்கள் மீது தடியடி நடத்திய உதகை எஸ்.பி.சுந்தரவடிவேல் மீது அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை கூறியதாவது:- எல்.முருகன் வேட்புமனு தாக்கலுக்கு பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர். எல்.முருகனுடன் ஊர்வலமாக வந்த பாஜகவினரை உதகை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். காரணம் இன்றி பாஜக தொண்டர்கள் மீது உதகை போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். தடியடிக்கு காரணமாக உதகை எஸ்பி சுந்தரவடிவேலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    • தமிழ்நாட்டின் பலம் பொருந்திய தலைவர்களை அழைத்து வந்துள்ளார் பிரதமர் மோடி.
    • 400 தொகுதிகளுக்கு மேல் வென்று, 3-வது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைக்கும்.

    சேலம்:

    சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க. வின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மேடைக்கு வந்த பிரதமர் மோடி கூட்டணி கட்சி தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு வெள்ளி பேழையில் ஜவ்வரிசி பரிசாக வழங்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கட்டியணைத்தார்.

    கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், சமூக நீதி இலக்கணத்திற்கு முன்னுதாரணமாக பிரதமர் மோடி, ராமதாஸ் திகழ்கின்றனர். கடந்த 5 நாட்களாக தென்னிந்தியா முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்துள்ளார் என்றார்.

    பின்னர் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டின் பலம் பொருந்திய தலைவர்களை அழைத்து வந்துள்ளார் பிரதமர் மோடி. 400 தொகுதிகளுக்கு மேல் வென்று, 3-வது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைக்கும். ராமதாசின் கனவுகளை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்றார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமதாஸ் மூத்த தலைவராக இருப்பார்.
    • தமிழகத்தில் இந்த கூட்டணி வலுவான அணியாக களம் இறங்குகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் அதிரடி திருப்பமாக பாரதிய ஜனதா கட்சியுடன் பா.ம.க. கூட்டணி அமைத்துள்ளது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் தைலாபுரம் தோட்டத்தில் இதற்கான ஒப்பந்தம் இன்று காலை கையெழுத்தானது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இதைத்தொடர்ந்து தைலாபுரம் தோட்டத்தில் வைத்து பேட்டி அளித்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில்,

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பாட்டாளிகளால் உருவாக்கப்பட்ட கட்சியான பா.ம.க. மிக முக்கியமான முடிவை இன்று எடுத்துள்ளது. பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் மூத்த அரசியல் தலைவரான டாக்டர் ராமதாஸ் இந்த முடிவை எடுத்திருப்பதை பாரதிய ஜனதா கட்சி மனமுவந்து வரவேற்கிறது.

    400 இடங்களுக்கு மேல் பாரதிய ஜனதா கட்சியை வெற்றி பெற வைப்பதற்காக நாங்கள் வேள்வியோடு களம் இறங்கியுள்ளோம்.

    தமிழக அரசியலில் டாக்டர் ராமதாஸ் பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளார். மேலும் அவர் போராடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு உரிய மரியாதையை பாரதிய ஜனதா கட்சி அளிக்கும்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமதாஸ் மூத்த தலைவராக இருப்பார். வாஜ்பாய் காலத்தில் இருந்தே ராமதாஸ் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருக்கமாக அன்பு பாராட்டி வருகிறார். அந்த வகையில் இந்த நேரத்தில் மீண்டும் வலுவான கூட்டணியை அமைத்திருக்கிறோம்.

    பா.ம.க. தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் புதிய விடியலுக்காக, மாற்று அரசியலுக்காக குரல் கொடுத்து வருகிறார். அதனை முன்னெடுத்து செல்லும் தலைவராகவும் அவர் விளங்கி வருகிறார்.

    தமிழகத்தில் இந்த கூட்டணி வலுவான அணியாக களம் இறங்குகிறது. இதற்காக டாக்டர் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

    பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பா.ம.க. எடுத்துள்ள முடிவால் நேற்று இரவில் இருந்து தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது நடைபெற உள்ள பாராளு மன்ற தேர்தல் மட்டுமின்றி 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி நிச்சயம் அர சியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.

    கூட்டணியை இறுதி செய்து சேலத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் டாக்டர் ராமதாசையும், அன்புமணி ராமதாசையும் மேடை ஏற்றுவதற்கு முடிவு செய்தோம். இதற்காக இரவோடு இரவாக கோவையில் இருந்து புறப்பட்டு தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தோம்.

    டாக்டர் ராமதாஸ் எங்களுக்கு சிற்றுண்டி கொடுத்து வரவேற்றார். பிரதமர் மோடியுடன் கூட்டத்தில் பங்கேற்பதற்கு இருவருமே இசைவளித்துள்ளார்கள். பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. 2014, 2019-ம் ஆண்டு தேர்தல்களிலும் இணைந்து போட்டியிட்டுள்ளது.

    நடைபெற உள்ள தேர்தலில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கைகோர்த்துள்ளோம்.

    60 ஆண்டுகளாக தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அனைவருமே விரும்புகிறார்கள். டாக்டர் ராமதாசும் அதையே கூறி வருகிறார். அவர் தமிழக அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் வலு சேர்க்கப்போகிறார். அவருக்கு நாங்கள் முழு மரியாதையை அளிப்போம். இந்த நேரத்தில் வேறு அரசியலை பேச விரும்பவில்லை.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    இதைத்தொடர்ந்து அவரிடம், எந்தெந்த தொகுதியில் பா.ம.க. போட்டியிடும் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதுபற்றி விரைவில் அறிவிப்போம் என்று அண்ணாமலை தெரிவித்தார். பா.ம.க.வுக்கு மேல்சபை எம்.பி. அளிக்கப்படுமா? என்கிற கேள்விக்கு அன்புமணி, ராமதாஸ் இருவருமே பதில் அளிக்காமல் சென்று விட்டனர்.

    • தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆள்பவர்களை மாற்ற வேண்டும் என்று மக்கள் ஆழமாகவே எண்ணுகிறார்கள்.
    • எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் இல்லத்தில் இன்று காலை இரு கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில் பா.ஜனதா- பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ஜனதா கூட்டணியில் பாமக-வுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பா.ஜனதாவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி வருமாறு:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று பா.ம.க. முடிவு செய்துள்ளது. நாட்டின் நலன் கருதியும், பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக வேண்டும் என்கிற எண்ணத்திலும், தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரவுமே இந்த முடிவை எடுத்துள்ளோம்.

    தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆள்பவர்களை மாற்ற வேண்டும் என்று மக்கள் ஆழமாகவே எண்ணுகிறார்கள். அதனை கருத்தில் கொண்டு நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

    இதையடுத்து தமிழகத்தில் மாற்றம், முன்னேற்றம் அன்புமணி என்கிற கோஷத்தை முன்வைத்தீர்களே? அது என்ன ஆனது? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அன்புமணி பதில் அளிக்கவில்லை.

    • பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக நல்லாட்சி நடத்தி வருகிறது.
    • ஊழல் பற்றி பேசுவதற்கு தி.மு.கவுக்கு எந்த அருகதையும் கிடையாது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இன்று மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தென் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய தினம் கோவையில் நடக்கும் வாகன பேரணியில் பங்கேற்கிறார்.

    பிரதமரின் தமிழக வருகையானது, பா.ஜ.கவினருக்கு மேலும் ஊக்கத்தை கொடுத்துள்ளது. பா.ஜ.க.வினர் மட்டுமின்றி, தமிழக மக்களுக்கும் பிரதமரின் வருகை நம்பிக்கையை கொடுத்துள்ளது,

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக நல்லாட்சி நடத்தி வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான திட்டத்தை இப்போதே தொடங்கி விட்டோம்.

    பிரதமருக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தருகின்றனர். குறிப்பாக தமிழக மக்கள் பெருமளவு ஆதரவு அளித்து வருகின்றனர். இன்றைய தினம் கோவை மக்கள் பிரதமரை வரவேற்க பேரன்போடு காத்திருக்கின்றனர்.

    தேசத்திற்கு எதிரானவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். பா.ஜ.க தேசத்தின் வளர்ச்சியை நோக்கி பணிகளை செய்து வருகிறது. தேசத்தை கொள்ளை அடிப்பதும், ஊழல் செய்வதும் இந்தியா கூட்டணி தான்.

    தி.மு.க.வை சேர்ந்த நீலகிரி எம்.பி.ஆ.ராசா தொடர்புடைய 2ஜி ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம்.

    ஊழல் பற்றி பேசுவதற்கு தி.மு.கவுக்கு எந்த அருகதையும் கிடையாது. பா.ஜ.க ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் எந்தவொரு மத்திய மந்திரி மீதோ, எம்.பிக்கள் மீதோ சிறிய குற்றச்சாட்டு கூட சொல்ல முடியாத அளவுக்கு ஊழலற்ற நிர்வாகத்தை பா.ஜ.க. நடத்தி வருகிறது.

    ஊழலின் மறுபக்கமாக தி.மு.க.வும், இந்தியா கூட்டணியும் உள்ளது. பொன்முடி விவகாரத்தில் அவர் குற்றமற்றவர் என கோர்ட்டு சொல்லவில்லை என்பதே கவர்னரின் விளக்கமாக உள்ளது.

    நீலகிரியில் 2 முதல் 3 ஆண்டுகள் மக்களுக்காக பா.ஜ.க பணியாற்றி வருகிறது. கட்சி சொன்னால் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவேன். கட்சியின் கட்டளையை நிறைவேற்றுவது எனது பணி. கட்சி என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வேன்.

    பா.ஜ.க 3-வது முறையாக 400-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கோவை பா.ஜ.க.வின் கோட்டையாக உள்ளது. ஏற்கனவே இங்கு 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம். கோவையில் பா.ஜ.க. போட்டியிட முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது.
    • மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமர் ஆவார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பா.ஜ.க. பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

    இக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    * குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது.

    * கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 48 ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்தவர் பிரதமர் மோடி.

    * குமரியில் 1995-ல் ஏக்தா யாத்திரை துவங்கிய போது மோடி முக்கிய பங்கு வகித்துள்ளார்.

    * அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுடன் பிரதமர் மோடி வந்திருக்கிறார்.

    * 400 தொகுதிகள் வெற்றி என்பது வெறும் வார்த்தை அல்ல, இந்திய மக்களின் உணர்வு.

    * 1892-ல் குமரிக்கு வந்த நரேந்திர தத்தா பாறை மீது அமர்ந்து விவேகானந்தராக மாறினார்.

    * தற்போது இங்கு வந்துள்ள பிரதமர் மோடி ஞானியாக மாறியுள்ளார்.

    * மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமர் ஆவார்.

    * 147 கோடி மக்களின் விஸ்வ குருவாக பிரதமர் மோடி திகழ்கிறார் என்றார்.

    இதையடுத்து மகளிர் அணியின் சார்பில் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி பா.ஜ.க. சார்பாக பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

    முன்னதாக பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி. 40 மக்களவை தொகுதிகளிலும் நாம் நிச்சயம் வெல்வோம் என்றார்.

    • பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தவர்களை மத்திய அமைச்சர் எல்.முருகன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
    • இந்த கருத்துக்கள், ஆலோசனைகள் பிரதமரிடம் கொண்டு சேர்க்கப்படும்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இன்று காலை பா.ஜ.க. சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை மத்திய மந்திரி எல். முருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தவர்களை மத்திய அமைச்சர் எல்.முருகன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

    இதனையடுத்து திருச்செங்கோடு பஸ் நிலையம் அருகே உள்ள தினசரி காய்கறி சந்தையில், மாவட்ட பா.ஜ.க. சார்பில் அமைக்கப்பட்ட பிரதமரின் கருத்து கேட்பு முகாமில் பொதுமக்கள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பிரதமருக்கு வழங்கும் வகையில் அதற்கான வைக்கப்பட்ட பெட்டியில் அளித்தனர். இதனை மத்திய மந்திரி எல்.முருகன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி, வலிமையான பாரதம் வளர்ச்சி அடைந்த பாரதம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அதன டிப்படையில் பா.ஜ.க. சார்பில் கருத்துக் கேட்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதில் பொது மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன.

    எனவே பொதுமக்கள், இளைஞர்கள் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், அனைத்து தரப்பு மக்கள் இந்த முகாம்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டு, நமது நாட்டின் நலனுக்கும், வளர்ச்சிக்கும் தகுந்த கருத்துக்களை ஆலோசனைகளை ஒரு வெள்ளைத் தாளில் எழுதி இங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த கருத்துக்கள், ஆலோசனைகள் பிரதமரிடம் கொண்டு சேர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம்.
    • புதிய பாராளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மேல்-சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட மத்திய இணை மந்திரி எல்.முருகன், பதவியேற்ற பின் முதல் முறையாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். அவருக்கு பா.ஜனதாவினர் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி இந்தியாவை மிகவும் வளர்ந்த நாடாக மாற்றியுள்ளார். என் மண், என் மக்கள் தமிழக யாத்திரையில் பிரதமர் கலந்து கொண்டு நிறைவு செய்து வைத்தார். பா.ஜ.க.வின் இந்த யாத்திரை தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தமிழகத்தில் பா.ஜனதா முக்கிய கட்சியாகவும் வளர்ந்து கொண்டு உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. தோல்வியுற்ற ஆட்சியை கொடுத்துக்கொண்டு உள்ளது. குரங்கு கையில் பூமாலை கொடுத்ததுபோல தி.மு.க.வினர் ஆட்சி செய்து வருகின்றனர்.

    தி.மு.க.வின் முக்கிய நிர்வாகி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தமிழகத்திற்கு பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா, 2ஜி ஊழல் வழக்கில் தமிழகத்திற்கு தலை குனிவை ஏற்படுத்தி இருக்கிறார். நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பொதுமக்களுக்கு சாலை அமைப்பதற்கு பதிலாக தனக்கு சொந்தமான தங்கும் விடுதிக்கு சாலை அமைத்துள்ளார். தி.மு.க.வைச் சேர்ந்த 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நடைபெற்றது வருகிறது.

    தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சி மக்களை ஏமாற்றுகின்ற, லஞ்சம் வாங்குகின்ற மக்கள் பணத்தை சுரண்டுகின்ற ஒரு தோல்வியுற்ற ஆட்சியாக இருக்கிறது.

    ஊட்டி நகராட்சியில் தி.மு.க. கவுன்சிலர் லஞ்சம் வாங்குவதாக மற்றொரு கவுன்சிலர் குற்றம் சாட்டினார். ஆனால் அதுகுறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வியாபாரிகளுக்கு விருப்பமில்லாமல் ஊட்டி மார்க்கெட் கடைகள் இடிக்கப்படுகிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்களாக தி.மு.க. வினர் உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் கட்சி தனியாக போட்டியிட்டால் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் தி.மு.க. கூட்டணிக்கு சென்றுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரிடம் மண்ணை கவ்வினார். எனவே கமல்ஹாசன் பா.ஜ.க.விற்கு ஒரு பொருட்டே இல்லை.

    நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கி இருப்பதை வரவேற்கிறேன். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம். மகளிர் தினத்தன்று மகளிருக்கு பரிசு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கியாஸ் விலையை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் மேம்பாட்டிற்கு மட்டும் 3½ கோடி வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கழிப்பிடங்கள் இலவசமாக கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. 11 கோடி பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 400 ரூபாய் வீதம் கியாஸ் மானியமும் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய பாராளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்தியாவை மிகச்சிறந்த சுற்றுலா நாடாக மாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதில் ஊட்டி நகரும் இணையும். ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு குடிதண்ணீர் வசதி இல்லை. வாகன நிறுத்துமிடம் இல்லை. இதையெல்லாம் சரி செய்யும் விதத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர் பணியாற்றுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் மோகன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ராமன், மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பரமேஸ்வரன், நளினி சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், ஊட்டி நகர தலைவர் பிரவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • இந்தியா முழுவதும் மூன்றரை கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதனுடைய பட்டா பெண்கள் பெயரில் தான் வழங்கப்படுகிறது.
    • புதிய பாராளுமன்றத்தில், சிறப்பு கூட்டத்தில் ஒரே ஒரு மசோதா தான் தாக்கல் செய்யப்பட்டது. அது வரலாற்று சிறப்புமிக்க சட்டமாக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    மத்திய இணை மந்திரி எல்.முருகன் கோவைக்கு செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக நம்முடைய சகோதரிகள், தாய்மார்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு பல நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக இந்தியா முழுவதும் மூன்றரை கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதனுடைய பட்டா பெண்கள் பெயரில் தான் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச கழிப்பிடமும் கட்டி தரப்பட்டுள்ளது. மேலும் புதிய டிரோன் டெக்னாலஜி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3 கோடி பேரை லட்சாதிபதியாக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் இலக்கு. அதுவே பாரத பிரதமருடைய இலக்காக இருந்து வருகிறது.

    அதேபோல புதிய பாராளுமன்றத்தில், சிறப்பு கூட்டத்தில் ஒரே ஒரு மசோதா தான் தாக்கல் செய்யப்பட்டது. அது வரலாற்று சிறப்புமிக்க சட்டமாக்கப்பட்டது. அது பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இப்படி பெண்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த, முன்னேற்ற பிரதமர் நரேந்திர மோடி வேலை செய்து கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் 11 லட்சம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
    • பிரதமர் மீது தமிழக மக்கள் எந்த அளவு பாசம், அன்பு வைத்துள்ளார்கள் என்பதை 2 நாள் நிகழ்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

    திருச்செந்தூர்:

    மத்திய மந்திரி எல்.முருகன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி நேற்று தூத்துக்குடியில் சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரூ.17 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் சென்றுள்ளார். குலசேகரன்பட்டினத்தில் மட்டும் 986 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறு ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அங்கிருந்து ரோகிணி என்ற சிறிய வகை ராக்கெட் ஏவப்பட்டுள்ளது. இந்தியா இன்று விண்வெளி துறையில் மிகப்பெரிய சரித்திரம் படைத்து கொண்டிருக்கிறது. விண்வெளியில் உலகில் எந்த நாடும் செல்ல முடியாத பகுதிக்கு இந்தியாவின் சந்திராயன்-3 சென்று சாதனை படைத்துள்ளது.

    இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சந்திராயன்-3 விண்கலம் ரூ.560 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. சுமார் 1,000 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ள குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் மூலம் தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். 

    இதே போல் வ.உ.சி. துறைமுக விரிவாக்க பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் 11 லட்சம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலையம், துறைமுகம், ரெயில் நிலைய மேம்பாடு, ரெயில் மின்மயமாக்க பணிகள், 9 புதிய ரெயில் பாதைகள், அம்ரித்-2 திட்டத்தின் கீழ் 34 ரெயில் நிலையங்கள் மேம்பாடு என பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    வருகிற 2047-ம் ஆண்டு இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும். அதற்காக உட்கட்டமைப்பு மேம்பாடு வளர்ச்சி திட்டங்கள் செய்யப்பட வேண்டும். இந்தியாவில் 80 கோடி பேருக்கு மாதம் 5 கிலோ அரிசி மற்றும் பருப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 1 கோடியே 20 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது.

    பிரதமர் மோடியின் தமிழகம் வருகை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மீது தமிழக மக்கள் எந்த அளவு பாசம், அன்பு வைத்துள்ளார்கள் என்பதை 2 நாள் நிகழ்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

    என் மண் என் மக்கள் யாத்திரை தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். வெற்றிவேல் யாத்திரை மூலம் 4 எம்.எல்.ஏ.க்களை பெற்றோம். இந்த யாத்திரை மூலம் புதுச்சேரி உள்ளிட்ட 40 எம்.பி. தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

    மீன்வளத்தை பெருக்கவும் மாற்று தொழில் செய்யவும், மீனவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். இதுவரை 65 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மீனவர்களுக்காக 38 ஆயிரத்து 500 கோடி ரூபாயை ஒதுக்கியது பா.ஜனதா அரசு.

    இதுக்கு முந்தைய அரசு வெறும் ரூ.4 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. பா.ஜ.க. தான் 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மீனவர்களுக்காக மட்டுமே ரூ.1,800 கோடி கொடுத்துள்ளது.

    குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் இந்தியர் ஒவ்வொருவருக்கும் கவுரவமாக கருதப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் மோடியை இஸ்ரோ தலைவர் சோம்நாத், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
    • அரசு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவுள்ள சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு உள் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்.

    இதற்காகர் பிரதமர் மோடி இன்று காலை மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு வந்தார். பிரதமர் மோடியை இஸ்ரோ தலைவர் சோம்நாத், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின் விழா நடைபெறும் இடத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்.


     அரசு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    முதலில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம், தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது என்றார்.

    ×