செய்திகள்
பேராவூரணி அருகே கணவன் -மனைவி மீது தாக்குதல்
பேராவூரணி அருகே கணவன் -மனைவியை தாக்கி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேராவூரணி:
பேராவூரணி அருகே பின்னவாசல் பகுதியை சேர்ந்தவர் பாலாமணி (வயது 37) இவரது கணவர் நீலகண்டன்,
இவர் பின்னவாசல் தெற்கு பகுதியில் மாடுகளுக்கு புல் அறுத்து தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வழியில் வேலிக்கருவை முள்ளை வெட்டி போட்டிருப்பதை கண்ட நீலகண்டன் இதுபற்றி அங்கு நின்ற சிதம்பரம், மணிமாறன், சிங்காரம், ராஜ்மோகன், ஆகியோரிடம் கேட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் நீலகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பாலாமணி தடுக்க வந்தார். ஆனால் அவரையும் 4 பேரும் சேர்த்து தாக்கினர்.
இதுகுறித்து பாலாமணி அளித்த புகாரின்பேரில் பேராவூரணி போலீசார், சிதம்பரம் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.