செய்திகள்
மு.க.ஸ்டாலின் நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் துணை நிற்கும் - கே.எஸ்.அழகிரி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை:
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய இடங்களை வழங்கவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தி.மு.க.வை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்தநிலையில் இன்று கே.எஸ்.அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மதவாத, பாசிச சக்திகளையும், அவர்களை ஆதரித்து கைப்பாவைகளாகச் செயல்பட்டு வருபவர்களையும் எதிர்த்து தி.மு.க.வும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் மேற்கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவளித்து துணை நிற்கும்.
தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி, தமிழக தேர்தல் களங்களில் பல வெற்றிகளைக் குவித்துள்ளது. அந்த வெற்றிகள் தொடர்ந்திட, ஒற்றுமையுடனும், புரிதலுடனும் உறுதியோடு செயல்படுவோம்.
ஜனநாயகத்தை வீழ்த்த சதி செயலில் ஈடுபட்டு வரும் மக்கள் விரோத ஊழல் கட்சிகளை அம்பலப்படுத்தி, எதிர்த்து முறியடித்து மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் பழம்பெருமைகளை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய இடங்களை வழங்கவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தி.மு.க.வை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்தநிலையில் இன்று கே.எஸ்.அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மதவாத, பாசிச சக்திகளையும், அவர்களை ஆதரித்து கைப்பாவைகளாகச் செயல்பட்டு வருபவர்களையும் எதிர்த்து தி.மு.க.வும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் மேற்கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவளித்து துணை நிற்கும்.
தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி, தமிழக தேர்தல் களங்களில் பல வெற்றிகளைக் குவித்துள்ளது. அந்த வெற்றிகள் தொடர்ந்திட, ஒற்றுமையுடனும், புரிதலுடனும் உறுதியோடு செயல்படுவோம்.
ஜனநாயகத்தை வீழ்த்த சதி செயலில் ஈடுபட்டு வரும் மக்கள் விரோத ஊழல் கட்சிகளை அம்பலப்படுத்தி, எதிர்த்து முறியடித்து மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் பழம்பெருமைகளை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.