செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் வழங்கப்படும்

Published On 2020-01-08 09:03 GMT   |   Update On 2020-01-08 09:03 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் வழங்கப்படும் என்று கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

2020-ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளை (9-ந் தேதி) முதல் 12-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது. இதில் விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13-ந்தேதி வழங்கப்படும்.

இதில் புகார்கள் ஏதும் இருப்பின் மாவட்ட மற்றும் வட்ட கட்டுப்பாட்டு அறைகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். மாவட்ட கட்டுப்பாட்டு அறையில், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜகுரு (9442265972), உதவி மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்), ராமநாதபுரம் சிவக்குமார் (6369943809), மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தலைமை உதவியாளர் நடராஜன் (8072541609), பொது விநியோகத் திட்ட அலுவலக கண்காணிப்பாளர் நாகராஜன் (9442472825) ஆகியோரிடம் தகவல் தெரிவிக்கலாம்.

அதேபோல, வட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையில், ராமநாதபுரம் வட்டத்தின் தனி வட்டாட்சியர் (கு.பொ.வ) சபிதாள் பேகம் (9865718673), ராமேசுவரம் வட்டத்தின் வட்ட வழங்கல் அலுவலர் நம்புகாயத்திரி (பொ) (9487212723), திருவாடானை வட்டத்தின் வட்ட வழங்கல் அலுவலர் மீனாட்சி சுந்தரம் (7339657950), கீழக்கரை வட்டத்தின் வட்ட வழங்கல் அலுவலர் சேகு ஜலாலுதீன் (9443610521), ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்தின் வட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்தர் (9443502004), பரமக்குடி வட்டத்தின் வட்ட வழங்கல் அலுவலர் வரதன் (9443883450), முதுகுளத்தூர் வட்டத்தின் வட்ட வழங்கல் அலுவலர் மேகலா (9123544795), கமுதி வட்டத்தின் வட்ட வழங்கல் அலுவலர் கதிரவன் (9445000369), கடலாடி வட்டத்தின் வட்ட வழங்கல் அலுவலர் லலிதா (9445000368) ஆகியோரிடம் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News