செய்திகள்
விபத்து

திருமங்கலம் அருகே கார் விபத்து- முதியவர் பலி

Published On 2019-12-09 10:04 GMT   |   Update On 2019-12-09 10:04 GMT
திருமங்கலம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமங்கலம்:

கேரள மாநிலம் உமைய நல்லூரைச் சேர்ந்தவர் பஷீர்குட்டி (வயது72). இவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக காரில் மதுரை புறப்பட்டார். அவரது மகன் முகமது நிசார் (56), இஸ்மாயில் ஆகியோரும் அவருடன் வந்தனர். அனுசுதீன் (35) காரை ஓட்டினார்.

இன்று அதிகாலை மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகே காடனேரி பகுதியில் கார் வந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த அனைவரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பஷீர்குட்டி சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது.

முகமது நிசார், இஸ்மாயில், அனுசுதீன் ஆகியோர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News