செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு

மெரினா கடற்கரையை 6 மாதத்தில் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றவேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

Published On 2019-12-05 10:27 GMT   |   Update On 2019-12-05 10:27 GMT
மெரினா கடற்கரையை ஆறு மாதத்தில் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றவேண்டும் என மாநகராட்சி மற்றும் காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

மெரினாவில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும். மெரினாவை சுத்தமாக வைப்பது குறித்து டிசம்பர் 13ம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், கடற்கரையில் உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கடைகளை அகற்றவும் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
Tags:    

Similar News