செய்திகள்
ஒகேனக்கல் அருகே முதியவர் கோவிலில் தூக்குபோட்டு தற்கொலை
ஒகேனக்கல் அருகே குடிபோதையில் இருந்த முதியவர் கோவிலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்துள்ள கூத்தபாடி பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 55). கூலித் தொழிலாளி.
இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். செல்வத்திற்கு பல நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று செல்வன் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர், குடும்பத்தகராறு காரணமாக வீட்டின் அருகே உள்ள செல்லிஅம்மன் கோவிலுக்கு வந்து படுத்துள்ளார்.
இதையடுத்து கோவிலில் யாரும் இல்லாத சமயத்தில் செல்வன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்து விட்டு செல்வன் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவுசெய்து, செல்வன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.