செய்திகள்
ராஜபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து- முதியவர் பலி
ராஜபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள முதுகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது60). இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள சங்கரன்கோவில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்
அப்போது அந்த வழியாக தாறுமாறாக வந்த ஆட்டோ எதிர்பாராதவிதமாக பரமசிவம் மீது மோதி சாலையோரத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ஆட்டோவில் பயணம் செய்த தென்மலை கிராமத்தைச் சேர்ந்த வீரமணி (48), அவரது மனைவி சித்திரைவடிவு (43) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆட்டோ டிரைவர் பாண்டித் துரையை (30) கைது செய்தனர்.