செய்திகள்
கைது

இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்- கணவர் கைது

Published On 2019-09-13 14:40 GMT   |   Update On 2019-09-13 14:40 GMT
நாசரேத் அருகே தகராறில் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள வெள்ளமடம் இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் நடராஜன் (வயது38) கூலிதொழிலாளி. இவரது மனைவி அந்தோணி புஷ்பம் (30). நடராஜன் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வருவதால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அதேபோல் நேற்றும் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நடராஜன் மனைவியை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து அந்தோணி புஷ்பம் நாசரேத் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் மணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கூலி தொழிலாளி நடராஜனை கைது செய்தனர்.
Tags:    

Similar News