செய்திகள்
சென்னையில் மழை

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

Published On 2019-08-28 13:10 GMT   |   Update On 2019-08-28 13:10 GMT
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை:

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னைக்கு அருகிலுள்ள பூந்தமல்லி, ஆவடி, திருநின்றவூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இதேபோல், அசோக்நகர் வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம், பாரிமுனை, எழும்பூர், சேத்துப்பட்டு, பெசன்ட்நகர் உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மாலை முதல் மழை பெய்து வருகிறது.

காலை நேரத்தில் வெப்பம் சுட்டெரித்த நிலையில், மாலையில் பெய்த மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News