search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடீர் மழை"

    • குளிர்ச்சியான சூழல் நிலவியது
    • வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் கடந்த சில நாட்களாக வெயில் அதிக அளவு காணப்பட்டது. அதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது. மாலை 6.30 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது.

    சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர். மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பரமத்தி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 5 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • இந்நிலையில் திடீர் மழையால் பூமி குளிர்ச்சி அடைந்து குளிர்ச்சியான சீதோசண நிலை ஏற்பட்டுள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், கோப்பணம் பாளையம், இருக்கூர், சேளூர், கபிலர்மலை, பெரிய சோளிபாளையம், பிலிக்கல் பாளையம், குன்னத்தூர், வடகரை ஆத்தூர் கொத்தமங்கலம் குறும்பல மகாதேவி, ஜமீன் இளம் பள்ளி, சோழசிராமணி, தி.கவுண்டம்பாளையம், திடுமல், சுள்ளிப்பாளையம், பெருங்குறிச்சி, குப்பரிக்கா பாளையம், மணியனூர், குன்னமலை ,கூடச்சேரி, பரமத்தி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 5 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    அதனை தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், கூலி வேலைக்குச் சென்று வீடுகளுக்கு நடந்த செல்லும் கூலித்தொழிலாளர்கள் நனைந்து கொண்டு சென்றனர்.

    அதேபோல் சாலையோர கடைக்களிலும் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப் பட்டனர். இந்நிலையில் திடீர் மழையால் பூமி குளிர்ச்சி அடைந்து குளிர்ச்சியான சீதோசண நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் கிராமப் புறங்களில் பயிரிடப் பட்டுள்ள பயிர்கள் வெயிலின் தாக்கம் காரணமாக வாடிய நிலையில் இருந்தது. இந்த மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பரமத்திவேலூரில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் சாரல் மழை பெய்ய ஆரம்பித்து தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.
    • சாலையோரங்களில் போடப்பட்டிருந்த சிற்றுண்டி கடைகள், பலகாரக்கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மணப்பள்ளி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், சேளூர், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரையாத்தூர், கபிலக்குறிச்சி, பெரிய சோளிபாளையம், இருக்கூர், கோப்பணம் பாளையம், தி.கவுண்டம் பாளையம், சிறுநல்லிக்கோவில், கொத்தமங்கலம், சுள்ளிப்பாளையம், சோளசிராமணி, குரும்பலமகாதேவி, ஜமீன்இளம் பள்ளி, பெருங்குறிச்சி, மணியனூர், நல்லூர், கந்தம்பாளையம் கூடச்சேரி, பில்லூர், பரமத்தி, கபிலர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் சாரல் மழை பெய்ய ஆரம்பித்து தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.

    இதன் காரணமாக சாலையோரங்களில் போடப்பட்டிருந்த சிற்றுண்டி கடைகள், பலகாரக்கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து சென்றவர்களும் நனைந்தபடியே சென்றனர்.

    கடந்த 2 மாதத்திற்கு மேலாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் வெப்ப காற்று வீசி வந்த நிலையில், நேற்று மாலை பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    கிராமப் பகுதிகளில், கடும் வெயிலின் தாக்கம் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருந்தது. மழையின் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    7 மின்கம்பங்கள் சேதம்

    இந்த நிலையில், நேற்று மாலை பெய்த மழையின் போது நல்லூர், கந்தம்பாளையம் பகுதிகளில் சூறாவளி காற்றும் வீசியது. இதில் மாரியம்மன் கோவில் மற்றும் ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் உள்ள 7 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது.

    இந்த சூறாவளி காற்றால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. மின்கம்பங்கள் சாய்ந்ததால் அப்பகுதி முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின்சார வாரிய ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில், அக்னி நட்சத்திரம் கடந்த, 29-ல் முடிந்த போதும், மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. குறிப்பாக நேற்று முன்தினம் மாவட்டத்தில், 101.3 பாரன்ஹீட் வெயில் அளவு பதிவானது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை, 4 மணிக்கு மேல், தருமபுரி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் திடீர் மழை பெய்தது. அரை மணி நேரம் வரை பெய்த மழையால், தருமபுரியில் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த கால நிலை ஏற்பட்டதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அரூர் மற்றும் அச்சல்வாடி, மோப்பிரிப்பட்டி, தொட்டம்பட்டி, வாச்சாத்தி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் பரவலான மழை பெய்தது.

    • நாமக்கல் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • மேலும் வெயிலின் கடும் தாக்கம் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஆனங்கூர், அய்யம்பாளை யம், பிலிக்கல் பாளையம், அண்ணா நகர், சானார் பாளையம், பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், வடகரை யாத்தூர், கபிலர்மலை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், பெருங் குறிச்சி, சோழசிரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து பலத்த மழை இரவும் பெய்து கொண்டிருந்தது. மழையின் காரணமாக தார் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள், பல்வேறு பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு நடந்து செல்பவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.

    அதேபோல் சுற்று வட்டாக பகுதிகளில் சாலை ஓரங்களில் விற்பனை கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள், சிற்றுண்டி கடைகள், உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடி யாமல் அவதிப்பட்டனர்.

    அதேபோல் அக்னி நட்சத்திரம் தொடங்கி பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் தொடர்ந்து வாட்டி வந்த கடும் வெயி லின் தாக்கம் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப் பட்டு வந்தனர். இந்நிலையில் பெய்த மழையால் குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெயிலின் கடும் தாக்கம் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழையால் தார் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    மழையின் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருகிறது.
    • வழக்கமாக கத்திரி வெயில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    சேலம்:

    தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருகிறது. வழக்கமாக கத்திரி வெயில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    தற்போது கோடை காலத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் காலை முதல் மாலை வரை வெயில் அதிகமாக உள்ளது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குடைபிடித்தபடி செல்கின்றனர்.

    மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால், பொதுமக்கள் அவதி அடைகின்றனர். இரவு நேரங்களில் இதமான காற்று வீசி வருகிறது. இருப்பினும் பகலில் நிலவும் வெப்பம் காரணமாக வீடுகளில் புழுக்கம் நிலவுகிறது. இதனால், பெரும்பாலானோர் இரவு வீட்டின் வெளியே வெகுநேரம் படுத்து தூங்குகின்றனர்.

    திடீர் மழையால் மகிழ்ச்சி

    இந்த நிலையில் மாவட்டத்தில் நிலவி வரும் வெப்ப சலனம் காரணமாக இன்று அதிகாலை கன பெய்தது. சுமார் 2 மணி நேரம் விட்டு விட்டு இந்த மழை பெய்தது.

    சேலம் 4 ரோடு, 5 ரோடுஇ அரசு ஆஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், 4 ரோடு, ஏற்காடு அடிவாரம், அயோத்தியாப்பட்டணம், இரும்பாலை, கருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக மேட்டூரில் 54 மில்லி மீட்டர் மழை பதிவானது. மழையின்போது மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அதாவது விட்டு விட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது. மழை முடிவடைந்ததும் மின் விநிேயாகம் சீரானது. இந்த திடீர் மழையால் வீடுகளில் குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வார விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா வாகனங்கள் கொடைக்கானல் மலை ச்சாலையில் அணிவகுத்து சென்றன.
    • திடீரென சாரலாக பெய்ய தொடங்கிய மழை அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்த நிலையில் இதமான வெயிலுடன் குளுகுளு சீசன் நிலவி வருவதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    வார விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா வாகனங்கள் மலை ச்சாலையில் அணிவகுத்து சென்றன. கடந்த சில நாட்களாகவே மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    இந்த நிலையில் நேற்று திடீரென சாரலாக பெய்ய தொடங்கிய மழை அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. அதனுடன் டார்ச் லைட் அடித்தது போல் வெயிலும் அடித்ததால் சுற்றுலா பயணிகள் இதனை ரசித்தனர். மேலும் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகளும் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர். அவ்வப்போது மழை பெய்து இதமான சீதோசனம் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழையில் குடை பிடித்தபடியே சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர்.

    இதனால் மோயர்பாய்ண்ட், குணாகுகை, கோக்கர்வாக், பிரையண்ட் பூங்கா, பைன்பாரஸ்ட், ரோஜாபூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

    • மாணவர்கள் குடை பிடித்தப்படி சென்றனர்.
    • மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கோவை :-

    கோவையில் கடந்த சில நாட்களாக கனமழையும், அவ்வபோது சாரல் மழையும் பெய்து வருகிறது. வரும் நாட்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் லேசான தூரலோடு குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் இன்று காலை திடீரென ஆங்காங்கே மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் மாலை நேரங்களில் தான் மழை பெய்து வருகிறது. இன்று காலையே மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குடை பிடித்தப்படி சென்றனர்.சிலர் ஆபத்தை உனறாமல் மோட்டார் சைக்கிளில் குடைபிடித்து சென்றனர். கோவை சரவணம்பட்டி, கணுவாய், பீளமேடு, கவுண்டம்பாளையம், பெரிய நாயக்கன்பாளை யம்், நரசிம்ம நாயக்க ன்பாளையம், வடகோவை உள்ளிட்ட பகுதியில் மிதமான மழை பெய்தது.

    ெபாள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை பகுதிகளில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் வால்பாறையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வரும் நாட்களில் இதே போல மழை பெய்தால் வெயிலின் தாக்கம் இல்லாமல் தப்பித்து கொள்ளலாம். மழையினால் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    • திடீர் மழையால் பண்ருட்டி- சென்னை சாலை சேறும் சகதியுமாக மாறியது.
    • நாற்கர சாலை பணிக்காக சாலை ஓரங்களில் இருந்த வீடு, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை போடும் பணிதொடங்கியது.

    கடலூர் 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சென்னை சாலை திடீர் மழையால் சேரும்சகதியுமாகிபோக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதுகுறித்து கடலூர் கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டம் பண்ருட்டி சென்னை சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை யாக தரம் உயர்த்தப்பட்டு நாற்கரசாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நாற்கர சாலை பணிக்காக சாலை ஓரங்களில் இருந்த வீடு, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை போடும் பணிதொடங்கியது. ஆனால் 10 ஆண்டு களாகதொடங்கிய நிலையிலேயே இந்த பணி உள்ளதால் சாலையில் குண்டும் குழியும் ஏற்பட்டு உயிர் பலி வாங்கும் சாலையாக இந்த பண்ருட்டி சென்னை சாலை மாறி உள்ளது. கடந்த 2 நாட்களாக பண்ருட்டியில் மழை பெய்து வருவதால் குண்டும் குழியுமான சாலை சேரும் சகதியும் மாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள மரண குழியில் விழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது. எனவே கடலூர் கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேசி இந்த போக்குவர த்துக்லாயக்கற்ற சாலையை சீரமைத்து தரவேண்டும் என அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்

    ×