search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூரில் திடீர் மழை
    X

    திருப்பத்தூரில் திடீர் மழை

    • குளிர்ச்சியான சூழல் நிலவியது
    • வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் கடந்த சில நாட்களாக வெயில் அதிக அளவு காணப்பட்டது. அதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது. மாலை 6.30 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது.

    சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர். மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×