செய்திகள்
தருமபுரியில் லாரிகள் மோதல்-டிரைவர் பலி
தருமபுரி அருகே விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
பெங்களூருவில் இருந்து லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் டிரைவராக சேலம் மாவட்டம், அயோத்திய பட்டணத்தை அடுத்த வலசையூர் பகுதியை சேர்ந்த ஞானசேகர் (வயது49), செவ்வாய்பேட்டை நரசிம்மர்ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (65) ஆகிய 2 பேரும் இருந்தனர்.
அப்போது தருமபுரி சவுளூர் மேம்பாலம் அருகே வந்த போது முன்னால் சென்ற லாரி மீது ஞானசேகர் ஓட்டி வந்த லாரி கட்டுபாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஞானசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த சுப்பிரமணியனை மீட்டு அக்கம்பக்கத்தினர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தருமபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான லாரி டிரைவர் ஞானசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெங்களூருவில் இருந்து லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் டிரைவராக சேலம் மாவட்டம், அயோத்திய பட்டணத்தை அடுத்த வலசையூர் பகுதியை சேர்ந்த ஞானசேகர் (வயது49), செவ்வாய்பேட்டை நரசிம்மர்ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (65) ஆகிய 2 பேரும் இருந்தனர்.
அப்போது தருமபுரி சவுளூர் மேம்பாலம் அருகே வந்த போது முன்னால் சென்ற லாரி மீது ஞானசேகர் ஓட்டி வந்த லாரி கட்டுபாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஞானசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த சுப்பிரமணியனை மீட்டு அக்கம்பக்கத்தினர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தருமபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான லாரி டிரைவர் ஞானசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.