செய்திகள்
கைது

வாகன சோதனையின் போது போக்குவரத்து போலீஸ்காரர் மீது தாக்குதல் - 2 வாலிபர்கள் கைது

Published On 2019-07-12 07:05 GMT   |   Update On 2019-07-12 07:05 GMT
வாகன சோதனையின் போது போக்குவரத்து போலீஸ்காரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ. கோவில் சந்திப்பு அருகே போக்குவரத்து தலைமை காவலர் பிரபு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாரை கண்டதும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தப்பி செல்ல முயன்றனர்.

அவர்களை போலீஸ்காரர் பிரபு மற்றும் போலீசார் மடக்கி பிடித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் பிரபுவை தாக்கி கீழே தள்ளினர்.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித், முகுந்தன் என்பது தெரிந்தது.

தாக்குதலில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் பிரபுவுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News