செய்திகள்

கொரடாச்சேரி அருகே 2 வீடுகளில் தீ விபத்து- ரூ.4 லட்சம் பொருட்கள் சேதம்

Published On 2019-06-24 16:03 GMT   |   Update On 2019-06-24 16:07 GMT
கொரடாச்சேரி அருகே 2 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த 9 பவுன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமானது.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை அடுத்த தாழைக்குடியை சேர்ந்தவர் விஜய மனோகரி. இவரது வீட்டின் அருகில் நக்கீரன் என்பவர் வீடு உள்ளது. 

இந்த நிலையில் விஜய மனோகரி வீட்டின் அருகில் உள்ள மூங்கில் தோப்பில் மூங்கில்கள் காற்றில் உரசியதில் ஏற்பட்ட தீப்பொறி பறந்து வந்து விஜய மனோகரி கூரை வீட்டில் விழுந்தது. இதில் வீடு முழுவதும் பரவிய தீ அருகில் உள்ள நக்கீரன் வீட்டிலும் பிடித்தது. இதில் வீட்டில் இருந்த 9 பவுன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமானது. 

இதுபற்றிய தகவலின் பேரில் திருவாரூர்  தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருந்த போதிலும் 2 வீடுகளிலும் ரூ.4 லட்சம் மதிப்பிலான  பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News