search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருட்கள் சேதம்"

    • தீ கடை முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.
    • தீ வேகமாக பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து பொருட்களை அப்புறப்படுத்தினர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் அரங்கபாலா நகர் ஆட்கொல்லி பாலம் அருகே ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பேரீச்சம்பழம் மற்றும் உலர் பழவகை கடை உள்ளது. இந்த கடையில் பேரீச்சம்பழம் மற்றும் பாதாம், முந்திரி உள்ளிட்ட உலர் பழ வகைகள் மொத்தமாகவும், சில்லைரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடை உரிமையாளர் ரவிச்சந்திரன் கோவிலுக்காக வெளியூர் சென்ற நிலையில் கடையில் பணிபுரியும் பணியாளர்கள் வழக்கம்போல் இரவு பணியை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றனர்.

    இன்று காலையில் கடையிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறுவதை கண்டு அவ்வழியே சென்ற பொதுமக்கள் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ கடை முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    இதையடுத்து தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து புகைமூட்டத்துடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து தீ வேகமாக பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து பொருட்களை அப்புறப்படுத்தினர். இருந்தபோதிலும் கம்ப்யூட்டர், ஏ.சி. உள்ளிட்ட சாதனங்கள் உள்பட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுவதும் எரிந்து சேதமாகின. தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்க கூடும் என தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடையிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறுவதை கண்டு அவ்வழியே சென்ற பொதுமக்கள் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • தீ வேகமாக பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து பொருட்களை அப்புறப்படுத்தினர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் அரங்கபாலா நகர் ஆட்கொல்லி பாலம் அருகே ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பேரீச்சம்பழம் மற்றும் உலர் பழவகை கடை உள்ளது. இந்த கடையில் பேரீச்சம்பழம் மற்றும் பாதாம், முந்திரி உள்ளிட்ட உலர் பழ வகைகள் மொத்தமாகவும், சில்லைரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடை உரிமையாளர் ரவிச்சந்திரன் கோவிலுக்காக வெளியூர் சென்ற நிலையில் கடையில் பணிபுரியும் பணியாளர்கள் வழக்கம்போல் இரவு பணியை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றனர்.

    இன்று காலையில் கடையிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறுவதை கண்டு அவ்வழியே சென்ற பொதுமக்கள் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ கடை முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    இதையடுத்து தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து புகை மூட்டத்துடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து தீ வேகமாக பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து பொருட்களை அப்புறப்படுத்தினர். இருந்தபோதிலும் கம்ப்யூட்டர், ஏ.சி. உள்ளிட்ட சாதனங்கள் உள்பட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுவதும் எரிந்து சேதமாகின. தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்க கூடும் என தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இன்று அதிகாலை 2.30 மணியளவில் இரும்பு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது.
    • தீ விபத்து தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசில் தங்கராஜ் புகார் செய்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது57). இவர் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான குடோன் விருதுநகர் பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இரும்பு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அந்தப்பகுதி மக்கள் உடனே விருதுநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ மளமளவென பரவியது.

    இதற்கிடையே விரைந்து வந்த அவர்கள் குடோன் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே தீ விபத்து ஏற்பட்டிருந்தது. குடோனில் 75 சதவீத பகுதி முழுவதும் தீக்கிரையாகின. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் குடோனில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருந்தது.

    அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருதுநகர் பழைய பஸ் நிலையப் பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    தீ விபத்து தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசில் தங்கராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது சதி செயலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழுது பார்ப்பதற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை செலவாகும் என்று மெக்கானிக்குகள் தெரிவித்துள்ளனர்.
    • கனமழையால் சேதமடைந்த வாகனங்களை சரி செய்ய முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும் போல் இருக்கிறது.

    கீழ் தளங்களில் உள்ள வீடுகளை மூழ்கடித்த வெள்ளம் காரணமாக வீட்டில் இருந்த டி.வி, பிரிட்ஜ், கட்டில், மெத்தை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் முழுமையாக சேதம் அடைந்துள்ளன.

    வெள்ளம் வடிந்த பின்னர் தங்களது வீடுகளை போய் பார்த்த மக்கள் சேதமான பொருட்களை கண்டு கண்ணீர்விட்டனர். சேதம் அடைந்த எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் கட்டில் மெத்தைகளை எப்படி வாங்கப் போகிறோம் என நினைத்து பொதுமக்கள் வேதனையில் தவித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே வீடுகளின் அருகில் மேடான பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ போன்ற வாகனங்களும் வெள்ளத்தில் மூழ்கி கடுமையான சேதம் அடைந்து உள்ளன. இவைகளை பழுது பார்ப்பதற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை செலவாகும் என்று மெக்கானிக்குகள் தெரிவித்துள்ளனர்.

    மழையால் பாதிக்கப்பட்டு பழுதாகியுள்ள டி.வி., வாஷிங் மிஷின் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களாலும் கூடுதல் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி வெள்ள பாதிப்பால் ஏற்பட்டுள்ள திடீர் செலவுகளை சமாளிக்க முடியாமல் நடுத்தர மக்கள் திக்குமுக்காடி வருகிறார்கள்.

    மாதச் சம்பளத்தில் குடும்பம் நடத்துவோர் ஏற்கனவே இ.எம்.ஐ. தவணை தொகையால் பார்த்து பார்த்து செலவழித்து வரும் நடுத்தர மக்களுக்கு ஏற்பட்டு உள்ள இந்த திடீர் செலவு அவர்களது கழுத்தை நெரிப்பதாகவே மாறி இருக்கிறது.

    சென்னையில் கனமழையால் சேதமடைந்த வாகனங்களை சரி செய்ய முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.

    இதுபற்றி திருநின்றவூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஜெயபால் கூறும்போது, "கொரட்டூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தியிருந்த நிலையில் எனது வாகனம் வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்துள்ளது. குறைந்த பட்சம் ரூ.2 ஆயிரமாவது செலவு வைத்துவிடும். வேறு வழியின்றி பழுது நீக்க எடுத்து வந்திருக்கிறேன்" என்றார்.

    கொரட்டூரைச் சேர்ந்த வாகன பழுது நீக்கும் கடை உரிமையாளர் எம்.கோபால கிருஷ்ணன் கூறும்போது, 'பழுதான ஒரு வாகனத்தை சரி செய்ய குறைந்தது 2 மணி நேரத்துக்கு மேலாகும். மேலும் என்ஜின் பழுதடைந்து இருந்தால், ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும்' என்றார்.

    தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் கூறும் போது, ஆட்டோவுக்குள் நீர் புகுந்தால் சரிசெய்ய ரூ.6 ஆயிரம் வரை செலவாகும். அதேநேரம் ஒரு வாரமாக தொழில் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். இவற்றை கருத்தில் கொண்டு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

    உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் அ.ஜாகிர் ஹூசேன் கூறும்போது, 'கார்களை பொறுத்தவரை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். வெள்ளத்தில் சிக்கினால் காப்பீடு கிடையாது என பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. எனவே அரசு உதவ வேண்டும்' என்றார்.

    முக்கியமாக வியாபாரிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம், அரசுக்கு கிடைக்க வேண்டிய வரிகள் சுமார் ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

    • இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றுள்ளனர்.
    • மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட நகரான் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் வயது (45)இவர் மரக்காணத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இவரது குழந்தைகளும் பள்ளிக்கு சென்று உள்ளனர் .இந்நிலையில் நேற்று மாலை இவரது வீடு திடீரென தீ பற்றி எரிந்துள்ளது இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றுள்ளனர். அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென கூரை வீடு முழுக்க பரவி உள்ளது. இவரது வீட்டின் அருகில் உள்ள ராஜேந்திரன் வீடும் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் 2 கூரை வீடுகளும் தீப்பற்றி முழுவதுமாக எரிந்துவிட்டது

    இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி, டி.வி, கட்டில், பாத்திரங்கள், நில பத்திரம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகிவிட்டது இது பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் வடக்கு மாவட்டதி.மு.க. துணை செயலாளர் ரவிக்குமார், மரக்காணம் பேரூராட்சி துணை தலைவர் தலைவர் பலராமன், கவுன்சிலர்கள் தயாளன், பிரபாகரன் வருவாய் ஆய்வாளர் தினகரன், கிராம நிர்வாக அலுவலர் முத்து கணேஷ் மற்றும் வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜனார்த்தனன் வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவால் தான் இந்த தீ விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட 2குடும்பத்திற்கும்தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் அரிசி ,காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

    • வீட்டின் மேல் கூரைகள் அனைத்தும் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் அணைத்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் கூனக்கா பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது வீடு கூரை வீடு ஆகும். இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தார்கள். பின்னர் அதிகாலை நேரம் வீட்டில் புகை வருவதை கண்ட அனைவரும் எழுந்து வீட்டின் வெளியே வந்தனர்.

    அப்போது வீட்டின் மேல் கூரைகள் அனைத்தும் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியோடு தீயை அணைக்க முயற்சி த்தனர். இருப்பிடம் மள மள என கூரை வீடு என்பதால் பற்றி கொண்டது.

    விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் அணைத்தனர்.

    ஆனால் அதற்குள் வீடு முற்றிலும் தீயில் கருகி சேதமானது. இதில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள், ஆதார் கார்டு, பள்ளி, வீட்டு பத்திரங்கள், சான்றிதழ்கள் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமானது.

    முதற்கட்ட விசாரணை யில் மின் கசிவின் காரண மாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு நிலைய அலுவ லர்கள் தெரிவித்தனர்.

    • வழக்கம்போல நேற்று இரவு 11 மணியளவில் கடைைய மூடி விட்டு சென்றனர்.
    • சுமார் ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் முன்னாள் தி.மு.க. கவுன்சிலர். இவரும், இவரது அண்ணன் தம்பிதுரை ஆகிய 2 பேரும் திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தேவையான அலங்காரப் பொருட்கள் செய்யும் வேலை செய்து வருகின்றனர். வழக்கம்போல நேற்று இரவு 11 மணியளவில் கடைைய மூடி விட்டு சென்றனர். நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென இவரது கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவென கொளுந்து விட்டு எறிந்தது.

    இது குறித்து திண்டி வனம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தீய ணைப்புத் துறை நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீய ணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான அலங்காரப் பொருட்கள் கருகி முற்றிலும் சேதமானது. இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்கள் யார்? தொழில் போட்டி காரணமாக யாரேனும் கடைக்கு தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென்று கூரை வீட்டில் இருந்து புகை மண்டலமாக காட்சியளித்தது.
    • தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த வீட்டின் தீயை அணைக்க முயற்சி செய்தபோதும் தீயை அணைக்க முடியவில்லை.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் பி.என். பாளையத்தை சேர்ந்தவர் கந்தன் (வயது 46). சம்பவத்தன்று இரவு கந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கூரை வீட்டில் இருந்து புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் தீ மளமளவென பரவி கூரை வீடு எரியத் தொடங்கியது.

    அப்போது வீட்டில் இருந்த கந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறி அடித்துக் கொண்டு வெளியில் வந்து பார்த்தனர். இதனைத் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த வீட்டின் தீயை அணைக்க முயற்சி செய்தபோதும் தீயை அணைக்க முடியவில்லை. வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த 20 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள், 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரொக்க பணம் தீ யில் எரிந்து நாசமாயின. இது குறித்து கந்தன் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மேலூர் அருகே குடிசை வீட்டில் தீயில் கருகி ரூ. 1 லட்சம் பொருட்கள் சேதமானது.
    • குப்பைக்கு தீ வைத்ததால் இந்த விபரீத சம்பவம் நடந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது37), கூலித்தொழி லாளி. இவரது வீட்டருகே சிலர் குப்பைகளை குவித்து வைத்து தீ வைத்தனர்.

    அப்போது காற்று பலமாக வீசியதால் தீ அருகில் உள்ள ஜெயராஜின் குடிசை வீட்டுக்கு பரவியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென எரிய தொடங்கியது. இதுகுறித்து உடனடியாக மேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன் பேரில் மேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னாண்டி தலைமை யில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 1மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இருந்தபோதிலும் தீ விபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1லட்சத்து 10ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகிவிட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    • வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வர்கள் அலறிஅடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர்.
    • விரைந்து சென்று மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழைபெய்தது. இதனால் பண்ருட்டி அடுத்த புலவனூர் கிராமத்தில் முருகன் கோவில் தெருவில் உள்ள ஆனைஅப்பன் என்பவரது வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது. இதனால் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வர்கள் அலறிஅடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர். இடி விழுந்ததால் வீடு சேதம் அடைந்தது. வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் மின் சாதனங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. அந்த பகுதியில் இருந்த அனைத்து வீடுகளிலும் டெலிவிஷன், மிக்சி, கிரைண்டர் ஆகியவை இடி தாக்கியதில் சேதம் அடைந்தது. இடி, மழை காரணமாக இரவு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.இது குறித்து வருவாய்த் துறையினர், போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதே போல பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் கிராமத்தில் தோப்பு தெருவில் தொடர் மழை காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து பஞ்சாயத்து தலைவர் திருமலை ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்தார். இதனால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதே போல பண்ருட்டி கும்பகோணம்சாலையில் கிளை கருவூலம் எதிரில் மின் கம்பத்தில் இருந்து செல்லும் மின்சார வயர்கள் மீது மரங்கள் சாய்ந்து கிடந்தது. இதனால் அந்த வழியாக செல்பவர் மீது மரத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு) சப்- இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர்.மின் ஊழியர்கள் சாய்ந்து கிடந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு ஏற்பட இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    • திருச்சியில் மர்ம நபர்கள் வீட்டிற்குள் பட்டாசை வீசி எறிந்ததால் பாத்திரங்கள் மற்றும் துணிகள் சேதம் அடைந்தன
    • பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி:

    திருச்சி பெரிய மிளகு பாறை புது தெரு வசித்து வருபவர் பொன்னர் (43). நேற்று முன் தினம் இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர் இவருடைய வீட்டிற்குள் வெடியை கொளுத்தி போட்டுள்ளார்.

    இதில் வீட்டிற்குள் இருந்த துணி மற்றும் பாத்திரங்கள் அனைத்தும் தீயில் கருகியது. சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீயில் கருகிய பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.10 என்று கூறப்படுகிறது.

    இது குறித்து பொன்னர் செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி இ.பி. ரோடு கமலா நேரு நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்தானம் (வயது 54). இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று ஜெகதீஸ்வரன், சந்துரு, சக்திவேல் ஆகிய மூன்று வாலிபர்கள் வெடி வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சற்று தள்ளி சென்று வெடிக்குமாறு சந்தானம் அறிவுறுத்தியுள்ளார்.

    இதில் மூன்று பேரும் சேர்ந்து சந்தானத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு பீர் பாட்டிலால் அவரை தாக்கி குத்தியுள்ளனர்.

    இது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் சந்தானம் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெகதீஸ்வரன் (19) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே தீ விபத்தில் வீடு எரிந்து நாசமானதால் ரூ.1.5 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    கள்ளகுறிச்சி:

    கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா மனைவி முத்துலட்சுமி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்ற நிலையில் அவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்த தகவல் அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் (பொறுப்பு) தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிகள், மின்சாதன பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் பணம் உள்ளிட்ட மொத்தம் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

    ×