search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழைய பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
    X

    இரும்பு குடோனில் பற்றி எரியும் தீ.

    பழைய பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

    • இன்று அதிகாலை 2.30 மணியளவில் இரும்பு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது.
    • தீ விபத்து தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசில் தங்கராஜ் புகார் செய்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது57). இவர் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான குடோன் விருதுநகர் பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இரும்பு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அந்தப்பகுதி மக்கள் உடனே விருதுநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ மளமளவென பரவியது.

    இதற்கிடையே விரைந்து வந்த அவர்கள் குடோன் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே தீ விபத்து ஏற்பட்டிருந்தது. குடோனில் 75 சதவீத பகுதி முழுவதும் தீக்கிரையாகின. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் குடோனில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருந்தது.

    அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருதுநகர் பழைய பஸ் நிலையப் பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    தீ விபத்து தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசில் தங்கராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது சதி செயலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×