தமிழ்நாடு

அட்சய திரிதியை நாளான இன்று 3-வது முறையாக உயர்ந்த தங்கம் விலை

Published On 2024-05-10 10:10 GMT   |   Update On 2024-05-10 10:10 GMT
  • நகைக்கடைகளில் தங்க நகைகள் வாங்குவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பெண்கள் குவிந்தனர்.
  • தங்களுக்கு பிடித்த நகைகளை பெண்கள் ஆர்வமுடன் வாங்கினார்கள்.

சென்னை:

அட்சய திரிதியை அன்று தங்க நகை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும், அடிக்கடி தொடர்ந்து தங்கம் வாங்கி குவிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது ஆண்டாண்டு காலமாக மக்களிடையே உள்ள நம்பிக்கையாகும். இதனால் அள்ள அள்ளக் குறையாத செல்வ வளங்களை வாரித்தரும் அட்சய திரிதியை அன்று சிறிய நகையையாவது வாங்கிவிட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

இதனால், அட்சய திரிதியை நாளான இன்று நகைக்கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. சென்னை தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, குரோம்பேட்டை, பாடி, அண்ணாநகர், தாம்பரம் ஆகிய இடங்களில் உள்ள நகைக்கடைகளில் தங்க நகைகள் வாங்குவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பெண்கள் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை ஆர்வமுடன் வாங்கினார்கள்.

முன்னதாக, அட்சய திரிதியையொட்டி தங்கம் விலை இன்று காலையிலேயே 2 முறை அதிகரித்தது. கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது.

இந்நிலையில், இன்று 3-வது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. தற்போது சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,160-க்கும் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,770-க்கும் விற்பனையாகிறது. மொத்தத்தில் இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News