search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Price"

    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
    • கிராமுக்கு ரூ.2.50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50-க்கும் பார் வெள்ளி ரூ.86,500-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்தது.

    தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு, இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் சூழல், அமெரிக்காவில் வங்கி வட்டி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தது.

    இதன் மூலம் இதுவரை இல்லாத வகையில் தினமும் தங்கம் விலை அதிகரித்த படியே இருந்தது.

    கடந்த மார்ச் மாதம் இறுதியில் பவுன் ரூ.50 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின்னரும் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருந்தது.

    ரூ.52 ஆயிரம் முதல் ரூ.54 ஆயிரம் வரை பவுன் விலை தாண்டியது. தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் ஒரு நாளில் அதிகரிக்கும் விலை தொடர்ந்து அதிகமாக இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் பவுனுக்கு ரூ. ஆயிரத்துக்கு மேல் அதிகரித்தது.

    இதற்கிடையே கடந்த 19-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ. 55 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. இது ஏழை, நடுத்தர மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

    இதற்கிடையே நேற்று பவுன் ரூ.55 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54 ஆயிரத்து 760-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.6,845 ஆக இருந்தது.

    இந்த நிலையில் தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் விலையில் இன்று அதிரடி மாற்றம் காணப்பட்டது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,160 குறைந்து விலையில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதன் மூலம் பவுன் ரூ.54 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் விலையில் ரூ.145 குறைந்து ரூ.6,700 ஆக உள்ளது.

    தங்கத்தை போல வெள்ளி விலையிலும் பெரும் சரிவு காணப்பட்டது. வெள்ளி கிலோவுக்கு ரூ.2,500 குறைந்து ரூ.86 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50-க்கு விற்கப்படுகிறது.

    கடந்த 3 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தங்கம் விலை தொடர்ந்து உச்சநிலையில் இருந்ததால் ஏழை, நடுத்தர மக்கள் கவலையில் ஆழ்ந்தனர். தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தபடி இருக்கும் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் ஒரே நாளில் பெரும் சரிவு ஏற்பட்டு இருப்பது அவர்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. வரும் நாட்களிலும் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டு தனது வட்டி விகிதத்தை குறைக்காது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதனாலும் வேறு சில காரணங்களாலும் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    • ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 845 ஆக உள்ளது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.89 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.89-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் தொடர்ந்து உயர்வு காணப்பட்டது. சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்து 80-க்கு விற்றது.

    இந்தநிலையில் இன்று தங்கம் விலை குறைந்து சவரன் ரூ.55 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54 ஆயிரத்து 760-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 845 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.89 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.89-க்கு விற்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 870 ஆக உள்ளது.
    • தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.

    சென்னை:

    தங்கம் விலை சமீபத்தில் சவரன் ரூ.54 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. விலை தொடர்ந்து உயர்ந்தபடி இருந்து வருகிறது.

    இதனிடையே நேற்று சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54 ஆயிரத்து 320-க்கு விற்பனையானது

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.54 ஆயிரத்து 960-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 870 ஆக உள்ளது. ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.

    தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. இன்று வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.90,500-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.90.50-க்கு விற்கிறது.

    • வெள்ளி விலையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.
    • வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.89-க்கும் பார் வெள்ளி ரூ.89ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இம்மாத தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. அதே போல வெள்ளி விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,640-க்கும் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,705-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.89-க்கும் பார் வெள்ளி ரூ.89ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 53,360-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,670-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை சவரன் ரூ.53 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    • ஜிஎஸ்டி வரியை சரிசெய்ய வேண்டுமென்றால் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி வந்தால் மட்டும் இந்த நிலை மாறும்.
    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத்திட்டத்தின் சம்பளத்தை 400 ரூபாயாக உயர்த்தி அளிக்கிறோம் என்று உறுதி அளிக்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.பி கார்த்திக் சிதம்பரம் மீண்டும் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் காரைக்குடியில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது,

    இந்திய கூட்டணி சார்பில் கை சின்னத்தில் போட்டியிடுவதாகவும், தனக்கு கை சின்னத்தில் வாக்களிக்கும்படியும் கூறினார். இந்த தேர்தல் என்பது மிகவும் முக்கித்துவம் ஆனது. மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. இந்தியா எந்த திசையை நோக்கி பயணிக்க போகிறது என்பதை தேர்ந்தெடுக்கும் நேரம் இது. ஒரு வேட்பாளரை தாண்டிய தேர்தல் இது. இந்தியாவை இப்போது ஆண்டு கொண்டிருப்பது பாஜக, அவர்களின் கொள்கை இந்தி, இந்துத்துவா. அர்த்தம் என்னவென்றால் இந்தி மொழி தான் இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க வேண்டும், இந்தி மொழி தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் மற்ற மொழிகளை எல்லாம் மட்டம் தட்ட வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். நமக்கு அது சரிப்பட்டு வராது. நமக்கு தமிழ் தான் முக்கியம். தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    அவர்கள் இந்துத்துவா கொள்கையை பின்பற்றுகிறார்கள். கிறிஸ்துவர்களையும், இஸ்லாமியர்களையும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி அவர்களை மட்டம் தட்டுவதுதான் பாஜகவினரின் வேலையாக உள்ளது.

    20 ஆண்டுகளுக்கு முன் கோவில்களில் கிடா வெட்டும் நிகழ்வை ரத்து செய்தனர். இந்த இந்துத்துவா பாஜக ஆட்சி மீண்டும் வந்தால் நமது ஊர்களில் கிடா வெட்டுவதையும், சேவல் நேர்த்திக்கடனாக கொடுப்பதையும் தடை செய்து விடுவார்கள். அவர்களது இந்துத்துவா என்பது முழுக்க முழுக்க வடஇந்திய, சமஸ்கிருத, மேல்தட்டு வெஜிட்டேரியன் இந்துத்துவா. நமது நடைமுறை வாழ்க்கைக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை. நமது கிராமபுற பழக்க வழக்கங்கள் தொடர வேண்டும் என்றால் இந்திய கூட்டணியான கை சின்னத்தில் வாக்களியுங்கள்.

    நாம் அனைத்து பொருட்களுக்கும் வரி கட்டுகிறோம். நாம் 1 ரூபாய் வரிக்கட்டினால் நமக்கு திரும்ப வருவது 29 பைசா மட்டும் தான். ஆனால் வட இந்தியாவான உத்திர பிரதேச மாநிலத்தில் 1 ரூபாய் வரிக்கட்டினால் 2.73 பைசா அவர்கள் திரும்ப பெறுகிறார்கள்.


    எல்லா பொருட்களுக்கும் விலைவாசி அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 55 ரூபாயாக இருந்த கேபிள் டிவியின் சந்தா இப்போது 250 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு முக்கியக்காரணம் இந்தி, இந்துத்துவா அரங்சாங்கமான பாஜக மட்டுமே. விலையேற்றத்தை சரிசெய்ய வேண்டும் என்றால் ஜிஎஸ்டி வரியை சரிசெய்ய வேண்டுமென்றால் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி வந்தால் மட்டும் இந்த நிலை மாறும்.

    முதலமைச்சரின் நலத்திட்டங்கள் உங்களுக்கு நல்லப்படியாக வந்து கொண்டிருக்கிறது. மகளிர் உரிமை தொகை, காலை உணவு திட்டம், கல்லூரி பெண்களுக்கு ஊக்கத்தொகை, இலவச பேருந்து இவை அனைத்தும் தொடர வேண்டுமென்றால் கை சின்னத்தில் வாக்களியுங்கள்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத்திட்டத்தின் சம்பளத்தை 400 ரூபாயாக உயர்த்தி அளிக்கிறோம் என்று உறுதி அளிக்கிறேன். கல்விக்கடன் யாராவது வாங்கியிருந்தால் முழுமையாக ரத்து செய்யப்படும். இனிமேல் இரண்டு வாரங்களுக்கு யாரிடம் இருந்து உங்களுக்கு போன் வந்தால் ஹாலோ என்று கூறாமல் கைசின்னம் என்று தான் கூற வேண்டும்.

    நான் கூறிய அனைத்தும் நிறைவேற வேண்டும் என்றால் இந்திய கூட்டணியான கைசின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறினார்.

    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் தங்கம் வாங்குவோர் மற்றும் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இந்நிலையில் வார தொடக்கமான முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,660-க்கும் சவரன் ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,280-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,615-க்கும் விற்பனை.
    • தங்கம் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் 28-ந்தேதி சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை எட்டியது. இதையடுத்து வந்த நாட்களிலும் தங்கம் விலை உயர்ந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை ஜெட் வேகத்தில் ஏறியுள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,615-க்கும் சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,920-க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 2ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.87-க்கும் பார் வெள்ளி ரூ.87,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.85-க்கும் பார் வெள்ளி ரூ.85,000-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்து விற்பனையாகிறது. கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,510-க்கும் சவரன் ரூ.52,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.85-க்கும் பார் வெள்ளி ரூ.85,000-க்கும் விற்பனையாகிறது.

    தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    • தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்தது.
    • தங்கத்தின் விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த மாதம் 28-ந்தேதி வரலாற்றிலேயே முதன்முறையாக சவரன் ரூ.50,000-க்கு விற்பனையானது. மறுநாள் ரூ.51,120-க்கும், 30 மற்றும் 31-ந்தேதிகளில் ரூ.50,960-க்கும், 2-ந்தேதி ரூ.51,640-க்கும், நேற்று ரூ. 51,440-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,000-க்கும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தின் விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கத்தை போலவே வெள்ளியும் உயர்ந்து வருகிறது.
    • வெள்ளி கிராமுக்கு 40 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82-க்கும் கிலோவுக்கு 400 ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.82,000-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த மாதம் 28-ந்தேதி வரலாற்றிலேயே முதன்முறையாக சவரன் ரூ.50,000-க்கு விற்பனையானது. மறுநாள் ரூ.51,120-க்கும், 30 மற்றும் 31-ந்தேதிகளில் ரூ.50,960-க்கும் நேற்று ரூ.51,640-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.51,440-க்கும் கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,430-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தை போலவே வெள்ளியும் உயர்ந்து வருகிறது. இன்று வெள்ளி கிராமுக்கு 40 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82-க்கும் கிலோவுக்கு 400 ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.82,000-க்கும் விற்பனையாகிறது.

    • வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
    • வெள்ளி கிராமுக்கு 20 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.81-க்கும் கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.81 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் சவரன் ரூ.51,120-க்கு விற்பனையானது. இதனால் தங்கம் வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,370-க்கும் சவரன் ரூ.50,960-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.81-க்கும் கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.81 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    ×