செய்திகள்
கண் வலி மாத்திரை எமனாக மாறியது: வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
உசிலம்பட்டி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
உசிலம்பட்டியை அடுத்த எஸ்.போதம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 43). இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கண் ஆபரேசன் நடந்தது.
இதற்காக அவர் மாத்திரைகளை உட்கொண்டு வந்தார். இதனால் அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த லட்சுமணன் அங்குள்ள கண்மாயில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக் டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லட்சுமணன் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.