செய்திகள்
தொட்டியம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தொட்டியம்:
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அம்மன்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(26) இவர் பாப்பாபட்டியில் உள்ள கல்குவாரியில் மின் ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் மணிகண்டன் கல் குவாரியில் உள்ள எந்திரத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. உடனே சகஊழியர்கள் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.