செய்திகள்
எம்.ஜி.ஆர். நகரில், நாளை கருணாநிதி சிலை திறப்பு
எம்.ஜி.ஆர். நகர் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் கருணாநிதியின் மார்பளவு வெண்கல சிலையை உதயநிதி ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
போரூர்:
சென்னை தெற்கு மாவட்டம் கலைஞர் நகர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நகர் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் கருணாநிதியின் மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (வெள்ளி) மாலை 6 மணிக்கு நடக்கிறது.
கே.கே.நகர் தெற்கு பகுதி செயலாளர் கே.கண்ணன் தலைமையில் வடக்கு பகுதி செயலாளர் மு.ராசா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் விழாவில் முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
விழாவில் மாநில இளைஞரணி துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் மா.சுப்பிர மணியன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
முடிவில் 131-வது (அ) வட்ட செயலாளர் ராஜ், செழியன், நந்தகோபால், கே.வி.எஸ்.சுரேஷ், கண்ணன் ஆகியோர் நன்றி கூறுகிறார்கள்.
சென்னை தெற்கு மாவட்டம் கலைஞர் நகர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நகர் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் கருணாநிதியின் மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (வெள்ளி) மாலை 6 மணிக்கு நடக்கிறது.
கே.கே.நகர் தெற்கு பகுதி செயலாளர் கே.கண்ணன் தலைமையில் வடக்கு பகுதி செயலாளர் மு.ராசா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் விழாவில் முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
விழாவில் மாநில இளைஞரணி துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் மா.சுப்பிர மணியன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
முடிவில் 131-வது (அ) வட்ட செயலாளர் ராஜ், செழியன், நந்தகோபால், கே.வி.எஸ்.சுரேஷ், கண்ணன் ஆகியோர் நன்றி கூறுகிறார்கள்.