செய்திகள்
69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். #Ramadoss
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக் கீட்டை ரத்து செய்ய ஆணையிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா ஆகியோர் முன் நேற்று(நேற்றுமுன்தினம்) விசாரணைக்கு வந்தன.
அப்போது, வழக்கு குறித்த விவரங்களை கேட்டறிந்த நீதிபதிகள், “இடஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவது ஏன்? தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவு 69 சதவீதம் என்பது எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த கேள்விகளுக்கு மார்ச் 14-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக அரசு இந்த வினாக்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கத்தை அளித்தால் மட்டுமே 69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்ற முடியும். தமிழக அரசிடம் இப்போது உள்ள புள்ளிவிவரம் என்பது 1931-ம் ஆண்டு எடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கிய அறிவுரையின்படி தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Ramadoss
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக் கீட்டை ரத்து செய்ய ஆணையிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா ஆகியோர் முன் நேற்று(நேற்றுமுன்தினம்) விசாரணைக்கு வந்தன.
அப்போது, வழக்கு குறித்த விவரங்களை கேட்டறிந்த நீதிபதிகள், “இடஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவது ஏன்? தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவு 69 சதவீதம் என்பது எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த கேள்விகளுக்கு மார்ச் 14-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக அரசு இந்த வினாக்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கத்தை அளித்தால் மட்டுமே 69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்ற முடியும். தமிழக அரசிடம் இப்போது உள்ள புள்ளிவிவரம் என்பது 1931-ம் ஆண்டு எடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கிய அறிவுரையின்படி தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Ramadoss