செய்திகள்
சுப்பிரமணியன்

புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர்கள் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் - முதல்வர் அறிவிப்பு

Published On 2019-02-15 10:03 GMT   |   Update On 2019-02-15 10:03 GMT
காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். #PulwamaAttack
சென்னை:

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வாகனத்தின்மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

கடமையின்போது வீரமரணம் அடைந்த அவர்களில் இருவர் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், மற்றொருவர் அரியலூர் மாவட்டம் கார்குடி பகுதியை சேர்ந்த சிவச்சந்திரன் என்பது இன்று தெரியவந்துள்ளது.


இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பங்களுக்கும் தலா 20 லட்சம் ரூபாய் கருணைத்தொகையாக அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #PulwamaAttack #TNCM #Rs20lakhsolatium #CRPFpersonnel  
Tags:    

Similar News