search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி"

    போர்க் காலங்களில் வீரதீர சாகசங்களை புரியும் மாவீரர்களுக்கு இந்திய அரசு வழங்கும் மூன்றாவது மிகப்பெரிய விருதான ‘விர் சக்ரா’ விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயரை விமானப்படை பரிந்துரைக்கிறது. #IAFrecommends #Abhinandan #wartimegallantry #VirChakra #VirChakraaward
    புதுடெல்லி:

    இந்திய முப்படைகளில் போர்க் காலங்களில் வீரதீர சாகசங்களை புரியும் மாவீரர்களுக்கு ‘பரம் விர் சக்ரா’, ‘மஹா விர் சக்ரா’ மற்றும் 'விர் சக்ரா’ ஆகிய மூன்று மிகப்பெரிய விருதுகள் அளிக்கப்படுகின்றன.

    இந்நிலையில், இந்தியா மீது தாக்குதல் நடத்தவந்த பாகிஸ்தான் போர் விமானத்தை விரட்டிச் சென்று அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து பிடிபட்டு பின்னர் இந்திய அரசின் பெருமுயற்சியால் மீட்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பெயரை ‘விர் சக்ரா’ விருதுக்கு பரிந்துரைக்க இந்திய விமானப்படை தீர்மானித்துள்ளது.

    மேலும், பாகிஸ்தானின் பாகல்கோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி தரைமட்டமாக்கிய 12 விமானிகளின் பெயர்கள் ‘வாயு சேனா’ பதக்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது. #IAFrecommends #Abhinandan #wartimegallantry #VirChakra #VirChakraaward
    பாகிஸ்தானிடம் பிடிபட்டு மீண்ட இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தன் வரத்மான் பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீநகரில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். #IAF #WingCommander #AbhinandantransferVarthaman #WingCommanderAbhinandan
    புதுடெல்லி:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது ஒரு இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் சென்ற விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்தது.

    இந்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு தாயகம் திரும்பிய அபிநந்தன் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடைமுறைகள் முடிந்ததையடுத்து அவருக்கு ஒருமாதம் விடுமுறை அளிக்கப்பட்டது. 

    விடுமுறை காலம் முடிவதற்கு முன்னதாகவே முழுமையான உடல்தகுதியை பெற்ற அபிநந்தன் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் பணியில் சேர்ந்தார்.

    இந்நிலையில், அவரது பாதுகாப்பை முன்வைத்து ஸ்ரீநகரில் இருந்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள முக்கிய  விமானப்படை தளத்தில் அவர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை உயரதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். #IAF  #WingCommander #AbhinandantransferVarthaman #WingCommanderAbhinandan
    சத்தீஸ்கரைச் சேர்ந்த சாலையோர உணவக உரிமையாளர், பாகிஸ்தான் எதிர்ப்பை மக்களிடம் வித்தியாசமான முறையில் பதிய வைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். #PulwamaAttack #PakistanMurdabad
    ஜக்தல்பூர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். போராட்டம், கடையடைப்பு என தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.




    இந்நிலையில், சத்தீஸ்கர்  மாநிலம் ஜக்தல்பூரில் உள்ள சிறு உணவக உரிமையாளர், பாகிஸ்தான் எதிர்ப்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி உள்ளார். தள்ளுவண்டியில் வைத்து சிக்கன் வறுவல் வியாபாரம் செய்து வரும் அவர், ‘பாகிஸ்தான் ஒழிக’ என கூறும் வாடிக்கையாளர்களுக்கு சிக்கன் லெக் பீசில் 10 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என கூறியுள்ளார்.

    இதுபற்றி அவர் கூறும்போது, “மனிதநேயத்தை பாகிஸ்தான் ஒருபோதும் மதிப்பதில்லை. மதிக்க விரும்புவதும் இல்லை. அதனால்தான், பாகிஸ்தான் ஒழிக என அனைவரும் சொல்ல வேண்டும் என்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன்’ என்றார். #PulwamaAttack #PakistanMurdabad
    இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் என்று பாகிஸ்தான் ராணுவத்துக்கு அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் கட்டளையிட்டு உள்ளார். #Pulwamaattack #ImranKhan
    இஸ்லாமாபாத் :

    கா‌ஷ்மீர் மாநிலம் புலவாமாவில் துணை ராணுவ படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் இறந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா மட்டுமின்றி உலக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்‌ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியது.

    இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக கூறினார். இந்தியா போர் தொடுத்தால் தாக்குதலுக்கு தயாராக உள்ளதாக பாகிஸ்தானும் தெரிவித்தது. இதனால் இரு நாடுகளிடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் நேற்று கூட்டினார். கூட்டத்தில் ராணுவ தளபதி காமர் ஜாவத் பஜ்வா, துணை தளபதிகள், உளவுப்பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், நிதித்துறை, ராணுவத்துறை, வெளியுறவுத்துறை, உள்துறை மந்திரிகள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தின் போது, நாட்டின் பாதுகாப்பு அம்சம், போர் வந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷண் ஜாதவ் வழக்கை சர்வதேச கோர்ட்டில் எதிர்கொள்வது குறித்தும் ஆலோசித்தனர்.



    இந்த கூட்டம் முடிந்ததும் பாகிஸ்தான் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பாகிஸ்தான் மக்களை பாதுகாக்கும் வலிமையும் திறனும் பாகிஸ்தான் அரசுக்கு உள்ளது. இதில் நாம் உறுதியாக இருக்கிறோம். நடந்த சம்பவம் (புலவாமா தாக்குதல்) பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. பயங்கரவாதம் உள்ளிட்ட தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. இதற்கு இந்தியாவிடம் இருந்து ஆக்கபூர்வமான பதில் வரும் என்று நம்புகிறோம்.

    இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு யாராவது பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்துவதாக இந்திய அரசு தக்க ஆதாரங்களை கொடுத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். ஆக்கிரமிப்பு நோக்கத்திலோ அல்லது விபரீதமாகவோ இந்தியா ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டால் தக்க பதிலடி கொடுக்குமாறு பாகிஸ்தான் ராணுவத்துக்கு கட்டளையிடப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. #Pulwamaattack #ImranKhan

    புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. #PulwamaAttack #CRPF #HizbulMujahideen #RiyazNaikoo
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி 2,500 பாதுகாப்பு படையினர் (சி.ஆர்.பி.எப்.) 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது வெடிகுண்டு நிரப்பிய காரை ஓட்டி வந்து தீவிரவாதி மோத செய்தான்.

    இதில் 40 வீரர்கள் உடல் சிதறி பலியானார்கள். இது நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

    தாக்குதலை நடத்தியது உள்ளூரைச் சேர்ந்த 22 வயது ஆதில் அகமதுதர் என்பது தெரிந்தது. அவன் 350 கிலோ வெடிமருந்து நிரப்பிய காரை ஓட்டி வந்து தாக்குதல் நடத்தியதும் தெரிந்தது.

    இதையடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள்.

    இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இந்த தாக்குதல் காஷ்மீர் இளைஞர்கள் மூலம் நடத்தப்படும் என்றும் கூறி உள்ளது.

    காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான ரியாஸ் நைகூ பேசியதாக கூறப்படும் 17 நிமிட ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ரியாஸ் நைகூ பேசியதாவது:-

    ஆடியோவில் பேசிய ரியாஸ் நைகூ

    சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் (புல்வாமா) காஷ்மீர் மக்கள் மீதான அட்டூழியங்களுக்காக நடத்தப்பட்டது. பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் இருக்கும் வரை தொடர்ந்து அழுகுரல் கேட்டு கொண்டேதான் இருக்கும்.

    ராணுவம் இங்கு இருக்கும் வரை உங்களது வீரர்களின் சவப்பெட்டிகள் நிரம்பி கொண்டே இருக்கும். நாங்கள் சாக இருக்கிறோம். ஆனால் உங்களை வாழவிட அனுமதிக்க மாட்டோம். எங்கள் உயிர்களை தியாகம் செய்ய துணிந்து விட்டோம்.

    சரண் அடைவதை விட இறப்பதற்கே நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். 15 வயது சிறுவர் கூட தற்கொலை படை பயங்கரவாதியாக மாறி ராணுவ வாகனத்தை தகர்க்கும் நாள் வெகு தூரம் இல்லை. அவர்கள் (ராணுவம்) இங்கு இருக்கும்வரை இந்தகைய தாக்குதல் நீடிக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PulwamaAttack #CRPF #HizbulMujahideen #RiyazNaikoo
    பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #Pulwamaattack #Trump
    வாஷிங்டன்:

    பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, “புல்வாமாவில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதி நடத்திய தாக்குதல் மிகவும் கொடூரமானது. அது குறித்த அறிக்கைகள் எனக்கு கிடைத்துள்ளது.

    தாக்குதல் நடத்தியவர்களை பாகிஸ்தான் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றார்.

    அமெரிக்க அரசின் துணை செய்தி தொடர்பாளர் ராபர்ட் பல்லாடினோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    இத்தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு பாகிஸ்தான் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுகுறித்து பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்டு பேசினோம். சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.


    அவரை தொடர்ந்து டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்பால்டன், ராணுவ மந்திரி மைக்பாம்பியோ, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் ஆகியோரும் பேட்டி அளித்தனர்.

    அனைவரும் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தனர். ஜெய்ஷ் இ- முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகளின் சொர்க்க புரியாக்க ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினர். #Pulwamaattack #Trump
    காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவத்தில் காலியாக உள்ள 111 பணியிடங்களுக்கு 2,500 இளைஞர்கள் விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்றனர். #PulwamaAttack
    பாரமுல்லா:

    காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதியின் தற்கொலைப்படை தாக்குதலில் 40 மத்தியப்படை வீரர்கள் பலியானார்கள்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. ராணுவம் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் ராணுவத்தை பலப்படுத்துவதற்காக காலி இடங்களை நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவத்தில் காலியாக உள்ள 111 பணியிடங்களுக்கு வீரர்களை தேர்வு செய்யும் பணி நேற்று நடந்தது.

    இதற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதையடுத்து ராணுவத்தில் சேர நேற்று காஷ்மீர் இளைஞர்கள் பெருமளவில் திரண்டனர். மொத்தம் உள்ள 111 இடங்களுக்கு 2,500 இளைஞர்கள் திரண்டனர். அவர்களுக்கு பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு இறுதியாக அவர்களில் இருந்து 111 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.



    இதுபற்றி தேர்வுக்கு வந்த இளைஞர்கள் கூறுகையில், நாங்கள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக சேவை செய்ய ஆர்வமாக இருக்கிறோம். மேலும் எங்கள் குடும்பத்தை காப்பாற்றவும், நல்ல வேலைவாய்ப்பாக அமைந்துள்ளது என்றனர்.

    மேலும் சில இளைஞர்கள் கூறுகையில், நாங்கள் வேலைக்காக காஷ்மீரை விட்டு செல்ல மாட்டோம். ராணுவத்தில் வேலை என்பது மிகப்பெரிய வாய்ப்பு. காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்களை வேலைக்கு சேர்த்து உள்ளூரில் பிரச்சனைக்குரிய இடங்களில் பணி நியமனம் செய்தால், அவர்களால் மக்களுடன் எளிதில் அணுகி பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று தெரிவித்தனர்.

    ஜம்மு- காஷ்மீரில் மொத்தம் 22 மாவட்டங்கள் உள்ளன. இதில் ஸ்ரீநகர், அனந்தநாக், பாரமுல்லா, குல்காம், புல்வாமா ஆகிய 5 மாவட்டங்கள் மட்டுமே பயங்கரவாதிகளால் பாதிக்கப்படுகிறது.

    இங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர் தான் தனி நாடு கோ‌ஷத்துக்கு ஆதரவாக உள்ளனர். மற்ற 17 மாவட்டங்கள் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. காஷ்மீர் மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர்தான் பிரிவினையை ஆதரிக்கிறார்கள் என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #PulwamaAttack
    நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க் டீலர்களும் மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை 15 நிமிடங்கள் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளனர். #PulwamaAttack
    சென்னை:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி தாக்குதலில் 40 துணை ராணுவ படை வீரர்கள் பலியானார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களும் உயிர் இழந்தனர்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள இந்திய மக்களின் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திறது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

    பள்ளி, கல்லூரிகள், கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் அனைத்து பொது நல அமைப்புகள் சார்பாகவும் மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டன.

    தமிழ்நாடு பெட்ரோலியம் வணிகர்கள் சார்பில் கடந்த 16-ந்தேதி ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 15 நிமிடங்கள் மூடப்பட்டன. இரவு 8 மணி முதல் 8.15 மணி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 4,800 பெட்ரோல் பங்குகளில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க் டீலர்களும் மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை 15 நிமிடங்கள் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி கூறியதாவது:-



    தேசத்திற்காக 40 வீரர்கள் உயிர் இழந்துள்ள சம்பவம் நாட்டு மக்களை வேதனை அடைய செய்துள்ளது. உயிர் இழந்துள்ள வீரர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவிக்கும் வகையில் இன்று இரவு 7 மணிக்கு தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து பெட்ரோலிய பங்குகளிலும் விளக்குகளை அனைத்து விற்பனையை நிறுத்துகிறோம். 15 நிமிடங்கள் விற்பனை நடைபெறாது.

    அப்போது பங்குகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த வீரர்களின் ஆன்மா சாந்தி அடையும் வகையில் பேனர் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #PulwamaAttack
    காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கிய ரோபோ சங்கர், அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #PulwamaAttack #CRPFJawans
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் கடந்த 14-ந் தேதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    இதில் கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் உயிரிழந்தனர்.

    இவர்களது குடும்பங்களுக்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்.

    குண்டுவெடிப்பில் இறந்த அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் குடும்பத்தினரைச் சந்தித்த நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் கூறி ரூபாய் 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.



    பின்னர் ‘ரோபோ’ சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘நான் சினிமாக்காரன். என்னிடம் சினிமா சார்ந்த வி‌ஷயங்களை இந்த இடத்தில் எதுவும் கேட்க வேண்டாம். நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டிற்கு வந்திருக்கிறேன்.

    ’இன்றைக்கு நாம் குடும்பத்துடன் சந்தோ‌ஷமாக இருக்கிறோம் என்றால் அதற்கு இவர்களைப் போன்ற எல்லைசாமிகள் தான் காரணம். இன்றைக்கு நமது தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்களை நாம் இழந்து நிற்கிறோம். இது ஈடுகட்ட முடியாத இழப்பாகும்.



    இக்குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்பதே தெரியவில்லை. சிவசந்திரனால் மட்டுமே இந்த குடும்பம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர் பிரிவு என்பது ஈடுசெய்ய முடியாதது. இந்தக் குடும்பத்துக்கு என்னால் ஆன சிறு உதவியை வழங்க எண்ணினேன்.

    அவரது தாயாரிடம் பேசும்போது என் மகன் நாட்டுக்காக உயிரை விட்டுள்ளார். அது எனக்கு பெருமைதான் என அவர் தாய் கூறும்போது பெருமையாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #PulwamaAttack #CRPFJawans #RoboShankar

    புல்வாமா தாக்குதல் நடத்திய தற்கொலை பயங்கரவாதி ஆதில் ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 3 முறை ஒத்திகை பார்த்தது தெரிய வந்துள்ளது. #PulwamaAttack #CRPF #AdilAhmedDar
    ஸ்ரீநகர்:

    புல்வாமா நகரில் கடந்த வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலை நடத்தியவன் பெயர் ஆதில் அகமதுதார்.

    காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவனை மிகவும் திட்டமிட்டு ஜெய்ஷ்-இ- முகமது தலைவன் மசூத் அசார் தேர்வு செய்து இருந்தான்.

    பாகிஸ்தான் உள்பட வெளிநாட்டு பயங்கரவாதிகளை தாக்குதலுக்கு பயன்படுத்தினால் சர்வதேச அளவில் பாகிஸ்தான் அரசுக்கு குறிப்பாக இம்ரான் கானுக்கு நெருக்கடி வரும் என்பதால் காஷ்மீரைச் சேர்ந்த ஆதிலை தேர்வு செய்துள்ளனர். இவன் சிறு வயதிலேயே தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து விட்டான்.

    முதலில் இவன் ஜாகீர் மூஷா என்பவன் நடத்திய அன்சார் காஸ்வத் உல் ஹிந்த் என்ற இயக்கத்தில் இருந்தான். ஆனால் அந்த இயக்கத்துக்கு காஷ்மீர் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

    இந்த இயக்கம் அல் கொய்தா இயக்கத்தின் ஒரு பிரிவாக காஷ்மீரில் இயங்கி வந்தது. ஆனால் இந்த இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் அனைவரையும் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி விட்டனர். 4 பேர் மட்டுமே மிஞ்சி இருந்தனர்.

    இதையடுத்து அந்த இயக்கத்தில் இருந்து விலகிய ஆதில் அகமதுதார் ஜெய்ஷ்- இ-முகமது இயக்கத்தில் போய் சேர்ந்தான். மிக குறுகிய காலத்தில் இவன் மசூத் அசாரின் நம்பிக்கையை பெற்றான்.

    ஜிகாத் எனும் புனித போரை மேற்கொள்ள தயாராக இருப்பதாக ஆதில் கூறி இருந்தான். எனவே அவனை மிகப்பெரிய தாக்குதலுக்கு மசூத் அசார் பயன்படுத்தி கொண்டான்.

    கடந்த சில மாதங்களாக ஆதிலுக்கு தற்கொலை தாக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காகவே 10 பேர் கொண்ட ஒரு தனி குழுவை மசூத் அசார் உருவாக்கி இருந்தான். அந்த குழுவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்று இருந்தனர்.



    கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இவர்கள் தனித்தனியாக காஷ்மீர் வந்து சேர்ந்தனர். பிறகு ஒருங்கிணைந்து தற்கொலை தாக்குதல் திட்டமிட்டனர். ஜனவரி மாதமே குண்டுகளை தயாரித்து காரில் பொருத்தினார்கள். பிறகு அந்த கார் மூலம் ஒத்திகை நடத்தப்பட்டது.

    ஆதிலுக்கு சிறிய ரக காரை ஓட்டி சென்று தற்கொலை தாக்குதல் நடத்த பயிற்சி அளிக்கப்பட்டது. ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அவன் 3 முறை ஒத்திகை பார்த்தது தெரிய வந்துள்ளது.

    ஒத்திகை பார்த்தப்படி அவன் தற்கொலை தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. #PulwamaAttack #CRPF #AdilAhmedDar
    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு புல்வாமா தாக்குதலில் பலியான நமது வீரர்களின் தியாகம் விரயமாகப்போக அனுமதிக்காது. நமது ராணுவம் சரியான பதிலடி தரும் என அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். #Modigovernment #sacrificeofjawans #AmitShah
    ஜெய்ப்பூர்:

    பாஜக தலைவர் அமித் ஷா ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று உரையாற்றினார்.

    'எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மட்டும் முக்கியமான தேர்தல் அல்ல. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கே முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது அமையும்.

    பாஜக தோல்வியினால் துவண்டு விடாது, வெற்றியால் மமதையும் கொள்ளாது. மக்களுக்கு சேவை செய்வதற்காகதான் நாங்கள் அரசியலில் இருக்கிறோம்.

    மோடியை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மாபெரும் கூட்டணியின் முழக்கமாக உள்ளது. இந்த கூட்டணியின் தலைவர் யார் என்பதை ராகுல் காந்தி அறிவிக்க வேண்டும்.


    புல்வாமா தாக்குதலில் பலியான நமது வீரர்களின் தியாகம் விரயமாகப்போக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதிக்காது. நமது ராணுவம் இதற்கு சரியான பதிலடியை கொடுத்தே தீரும்’ என இந்த கூட்டத்தில் பேசிய அமித் ஷா தெரிவித்தார்.  #Modigovernment #sacrificeofjawans #AmitShah #Pulwamajawans #Pulwamaattack
    புல்வாமா தாக்குதலில் பலியான பஞ்சாப் வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமாக அளிக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.
    அமிர்தசரஸ்:

    காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படையை சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

    உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசுகளும் தனிநபர்களும் பெருமளவில் நிதியுதவி செய்து வருகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பலியான வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு சார்பில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் பலியான பஞ்சாப் மாநிலம், அனந்பூர் சாஹிப் பகுதியை சேர்ந்த வீரப் குல்விந்தர் சிங் இல்லத்துக்கு இன்று சென்ற பஞ்சாப் மாநில முதல் மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங், அவரது பெற்றோர் மற்றும் மனைவியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    ஏற்கனவே மாநில அரசின் சார்பில் 7 லட்சம் ரூபாய் கருணைத்தொகையும், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலமும் குல்விந்தர் சிங்கின் குடும்பத்தாருக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.



    இன்றைய சந்திப்புக்கு பின்னர் குல்விந்தர் சிங்கின் வாரிசு (மனைவி அல்லது பெற்றோர் இறக்கும்வரை) அவர்களுக்கு மாதந்தோறும் அரசின் சார்பில் 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.

    மேலும், அனந்த்புர் சாஹிப் நகரில் இருந்து குல்விந்தர் சிங் வாழ்ந்த கிராமத்தை இணைக்கும் சாலைக்கு அவரது நினைவாக குல்விந்தர் சிங் சாலை என பெயரிடப்படும் எனவும் முதல் மந்திரி வாக்குறுதி அளித்தார். அந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கும் குல்விந்தர் சிங் பெயர் சூட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார். #PunjabCM #monthlypension #Pulwamaattack  #CRPFpersonnel #KulwinderSingh
    ×