செய்திகள்

பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை - பள்ளிக் கல்வித்துறை

Published On 2019-01-27 16:27 GMT   |   Update On 2019-01-27 16:27 GMT
நாளை பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. #JactoGeo #Teachers #SchoolEducation
சென்னை:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. 

6-வது நாளாக தொடரும் போராட்டத்தால் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு  உள்ளனர்.

தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையிலுள்ள 400க்கு மேற்பட்ட ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், நாளை பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விடுத்துள்ள அறிக்கையில், பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுப்பவர்கள் மீது காவல் துறையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் புகார் அளிக்க வேண்டும். ஆசிரியர்களிடம் இருந்து புகார்கள் வந்தால் காவல் நிலையத்தில் பதிவுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. #JactoGeo #Teachers #SchoolEducation
Tags:    

Similar News