கோவை:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் திருமுருகன். இவரது மனைவி ஜெயந்தி (வயது 38).
சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் போடி பாளையம்- மலுமிச்சம் பட்டி ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மொபட் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த ஜெயந்தி சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அன்னூர் சத்தி மெயின் ரோட்டை சேர்ந்தவர் அம்ஜத் பாட்ஷா. இவரது மனைவி ஜெய்தூன் (வயது 48). சம்பவத்தன்று இவர் தனது கணவரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். மோட்டார் சைக்கிள் அன்னூர்- அவினாசி ரோட்டில் சென்ற போது திடீரென ஜெய்தூன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அம்ஜத் பாட்ஷா அந்த வழியாக சென்றவர்கள் உதவியுடன் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜெய்தூன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.