செய்திகள்

கஜா புயல் பாதிப்பு - திருவாரூரில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Published On 2018-11-22 16:40 GMT   |   Update On 2018-11-22 16:40 GMT
கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் திருவாருர் மாவட்டத்தில் உள்ள 5 தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Thriuvarur
திருவாரூர்:

கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல், மழையால் மாணவர்களின் புத்தகம் உள்ளிட்ட பொருட்களும் சேதம் அடைந்துள்ளது.

இந்நிலையில் திருவாரூரில் உள்ள 5 தாலுகாக்களில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய தாலுகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவாரூர், குடவாசல், வலங்கைமான், நன்னிலம், கொரடாச்சேரி ஆகிய பகுதிகளி செயல்படும் பள்ளிகளில்  முகாம் இருந்தால் நாளை விடுமுறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Thiruvarur
Tags:    

Similar News