செய்திகள்
அரூர் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
அரூர் அருகே விவசாயி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலையில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த தைலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 52). விவசாயி. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பொன்னுசாமி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.