செய்திகள்

கடலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2018-11-19 12:25 GMT   |   Update On 2018-11-19 12:25 GMT
கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்:

புயல், மழையால் பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்ட செயலாளர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மணிவண்ணன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News