செய்திகள்

மதுரையில் 3 கிலோ கஞ்சாவுடன் கணவன்-மனைவி கைது

Published On 2018-11-19 11:17 GMT   |   Update On 2018-11-19 11:17 GMT
கஞ்சா விற்ற கணவன் -மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.13 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை:

மதுரை கீழமாசிவீதி தேரடி அருகே கஞ்சா விற்கப்படுவதாக விளக்குத் தூண் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சோமு தலைமையில் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு கஞ்சா விற்றதாக கீரைத் துறை மேலதோப்பு பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் (43), மேலஅனுப்பானடி ஸ்ரீதரன் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5500 மற்றும் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது.

கூடல்புதூர் போலீசார் கரிசல்குளம் ராமுனி நகர் பகுதியில் சோதனை நடத்தியபோது கஞ்சா விற்றதாக ஆரப்பாளையம் கண்மாய் தெருவைச் சேர்ந்த முத்தையா, அவரது மனைவி மீனா (55) ஆகி யோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ.7700 பறிமுதல் செய்யப் பட்டது.

Tags:    

Similar News