தஞ்சையில் கணவர் குடிபழக்கத்தால் மனைவி தூக்குபோட்டு தற்கொலை
தஞ்சாவூர்:
தஞ்சை விளார் ரோடு மேலத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயஸ்ரீ (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
அய்யப்பன் தினமும் மது குடித்துவிட்டு வந்து ஜெயஸ்ரீயிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று அய்யப்பன் மது குடித்துவிட்டு வந்துள்ளார். இதை ஜெயஸ்ரீ கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஜெயஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் தஞ்சை தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் ஜெயஸ்ரீ உடலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்காக பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயஸ்ரீக்கு திருமணம் முடிந்து 5 வருடம் நிறைவடையாததால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.