செய்திகள்

கல்லுப்பட்டி அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி

Published On 2018-10-28 16:42 GMT   |   Update On 2018-10-28 16:42 GMT
மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

பேரையூர்:

மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் சங்கரபாண்டி. இவரது மகன் சிவமனோஜ் (வயது 25). இவர் டி.கல்லூபட்டி பி.ஆர்.நகரில் தங்கி செல்போன் டவர் பராமரிப்பு பணியை செய்து வந்தார். நேற்று சிவமனோஜ் மோட்டார் சைக்கிளில் வன்னி வேலாம்பட்டி விலக்கு பகுதியில் சென்றார்.

அப்போது மதுரையில் இருந்து ராஜபாளையம் சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில் சிவமனோஜ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவ மனோஜ் பரிதாபமாக இறந்தார். டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளிக்குடி அருகே உள்ள மொச்சிகுளத்தை சேர்ந்த வர் ராமர் (வயது 60). இவர் காட்டுப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாடு சாலையை கடந்தது. அதனை பிடிக்க ராமர் சென்றபோது. அந்த வழியே வந்த கார் அவர் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த ராமர், சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான காரை ஒட்டி வந்த மொச்சிகுளத்தை சேர்ந்த நெடுமாறனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News