செய்திகள்

சென்னையில் மழை நிவாரண பணிகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

Published On 2018-10-06 10:34 GMT   |   Update On 2018-10-06 10:34 GMT
சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.#TNRain #RedAlert #NDRF

சென்னை:

சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, இன்று முதல் மண்டல அலுவலர்களுக்கான ஆய்வு மற்றும் நிவாரணப் பணிகளை துவங்க உள்ளார்கள்.

1. கே.நந்தகுமார் (1-வது மண்டலம், திருவொற்றியூர்) 9499956201, 9445190001.

2. ஆர்.கண்ணன், (2-வது மண்டலம், மணலி) 9499956202, 9445190002

3. சந்தோஷ்பாபு, (3-வது மண்டலம், மாதவரம்) 9499956203, 9445190003

4. டி.என்.வெங்கடேஷ், (4-வது மண்டலம், தண்டையார்பேட்டை) 9499956204, 9445190004

5. டாக்டர். பி.உமாநாத், (5-வது மண்டலம், ராயபுரம்) 9499956205, 9445190005.

6. சி.காமராஜ், (6-வது மண்டலம், திரு.வி.க.நகர்) 9499956206, 9445190006

7. எம்.பாலாஜி, (7-வது மண்டலம், அம்பத்தூர்) 9499956207, 9445190007

8. டாக்டர்.ஆர்.ஆனந்தகுமார், (8-வது மண்டலம், அண்ணாநகர்) 9499956208, 9445190008

9. ‌ஷன்சோங்கம் ஜடக் சிரு, (9-வது மண்டலம், தேனாம்பேட்டை) 9499956209, 9445190009

10. சி.விஜயராஜ் குமார், (10-வது மண்டலம், கோடம்பாக்கம்) 9499956210, 9445190010

11. ஆர்.சீதாலட்சுமி, (11-வது மண்டலம், வளசரவாக்கம்) 9499956211, 9445190011

12. கிரண் குர்ராலா, (12-வது மண்டலம், ஆலந்தூர்) 9499956212, 9445190012

13. கே.பாலசுப்பிரமணியம், (13-வது மண்டலம், தண்டையார்பேட்டை அடையாறு) 9499956213, 9445190013

14. டாக்டர்.ஆர்.நந்த கோபால், (14-வது மண்டலம், தண்டையார்பேட்டை, பெருங்குடி) 9499956214, 9445190014

15. டாக்டர்.தாரேஸ் அகமது, (15-வது மண்டலம், சோழிங்கநல்லூர்) மண்டலம்) 9499956215, 9445190015

மேலும், சென்னை மாநகரில் 2015ம் ஆண்டு வெள்ளப் பெருக்கிற்கு பிறகு ரூ.150 கோடி மதிப்பீட்டில் 50 கி.மீ. நீளத்திற்கு பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது, பெருநகர சென்னை மாநகராட்சி நிதி 2018ன் கீழ், ரூ.290 கோடிமதிப்பீட்டில் 117 கி.மீ. நீளத்திற்கு 347 இணைப்பு மழைநீர் வடிகால் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ரூ.150 கோடி மதிப்பீட்டில் 51 கி.மீ. நீளத்திற்கு 130 விடுபட்ட மழைநீர் வடிகால் பணிகள் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடித்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவளம் வடிநிலப் பகுதிகளில் குறிப்பாக சோழிங்கநல்லூர், பெருங்குடிமற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் 326 கி.மீ. நீளத்திற்கு ரூ.1250 கோடிமதிப்பீட்டில் ஜெர்மன் நாட்டு வங்கி உதவியுடன் மழை நீர் வடிகால்பணிகள் மேற் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதலும், ஜெர்மன் நாட்டுநிதியும் கிடைத்தவுடன் இப்பணிகள் துவங்கப்படும். இதனால் இப்பகுதிகளில்வாழும் சுமார் 8 லட்சம் மக்கள் பயனடைவார்கள். #TNRain #RedAlert #NDRF

Tags:    

Similar News