என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்"
சென்னை:
சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, இன்று முதல் மண்டல அலுவலர்களுக்கான ஆய்வு மற்றும் நிவாரணப் பணிகளை துவங்க உள்ளார்கள்.
1. கே.நந்தகுமார் (1-வது மண்டலம், திருவொற்றியூர்) 9499956201, 9445190001.
2. ஆர்.கண்ணன், (2-வது மண்டலம், மணலி) 9499956202, 9445190002
3. சந்தோஷ்பாபு, (3-வது மண்டலம், மாதவரம்) 9499956203, 9445190003
4. டி.என்.வெங்கடேஷ், (4-வது மண்டலம், தண்டையார்பேட்டை) 9499956204, 9445190004
5. டாக்டர். பி.உமாநாத், (5-வது மண்டலம், ராயபுரம்) 9499956205, 9445190005.
6. சி.காமராஜ், (6-வது மண்டலம், திரு.வி.க.நகர்) 9499956206, 9445190006
7. எம்.பாலாஜி, (7-வது மண்டலம், அம்பத்தூர்) 9499956207, 9445190007
8. டாக்டர்.ஆர்.ஆனந்தகுமார், (8-வது மண்டலம், அண்ணாநகர்) 9499956208, 9445190008
9. ஷன்சோங்கம் ஜடக் சிரு, (9-வது மண்டலம், தேனாம்பேட்டை) 9499956209, 9445190009
10. சி.விஜயராஜ் குமார், (10-வது மண்டலம், கோடம்பாக்கம்) 9499956210, 9445190010
11. ஆர்.சீதாலட்சுமி, (11-வது மண்டலம், வளசரவாக்கம்) 9499956211, 9445190011
12. கிரண் குர்ராலா, (12-வது மண்டலம், ஆலந்தூர்) 9499956212, 9445190012
13. கே.பாலசுப்பிரமணியம், (13-வது மண்டலம், தண்டையார்பேட்டை அடையாறு) 9499956213, 9445190013
14. டாக்டர்.ஆர்.நந்த கோபால், (14-வது மண்டலம், தண்டையார்பேட்டை, பெருங்குடி) 9499956214, 9445190014
15. டாக்டர்.தாரேஸ் அகமது, (15-வது மண்டலம், சோழிங்கநல்லூர்) மண்டலம்) 9499956215, 9445190015
மேலும், சென்னை மாநகரில் 2015ம் ஆண்டு வெள்ளப் பெருக்கிற்கு பிறகு ரூ.150 கோடி மதிப்பீட்டில் 50 கி.மீ. நீளத்திற்கு பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது, பெருநகர சென்னை மாநகராட்சி நிதி 2018ன் கீழ், ரூ.290 கோடிமதிப்பீட்டில் 117 கி.மீ. நீளத்திற்கு 347 இணைப்பு மழைநீர் வடிகால் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ரூ.150 கோடி மதிப்பீட்டில் 51 கி.மீ. நீளத்திற்கு 130 விடுபட்ட மழைநீர் வடிகால் பணிகள் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடித்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவளம் வடிநிலப் பகுதிகளில் குறிப்பாக சோழிங்கநல்லூர், பெருங்குடிமற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் 326 கி.மீ. நீளத்திற்கு ரூ.1250 கோடிமதிப்பீட்டில் ஜெர்மன் நாட்டு வங்கி உதவியுடன் மழை நீர் வடிகால்பணிகள் மேற் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதலும், ஜெர்மன் நாட்டுநிதியும் கிடைத்தவுடன் இப்பணிகள் துவங்கப்படும். இதனால் இப்பகுதிகளில்வாழும் சுமார் 8 லட்சம் மக்கள் பயனடைவார்கள். #TNRain #RedAlert #NDRF
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்